உலக அளவில் புகழ் பெற்ற இசைக்குழுவினர்களில் பீட்டில்ஸ் குழுவினருக்கு முதலிடம் உண்டு. ராக் இசை குழுவினரான இவரது பாடல்கள் ஒரு காலத்தில் இசை ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து கொண்டிருந்தது. உலகம் முழுவதும் தங்களது இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயங்க வைத்தனர். ஆனால் இந்த குழுவில் உள்ள யாரும் முறைப்படி இசை கற்றுக் கொண்டது கிடையாது. இசையை எழுதவோ, படிக்கவோ அவர்களுக்கு தெரியாது. இதை அக்குழுவில் உள்ள முக்கிய இசைஞர் பால் மெக்கார்டினி கடந்த 2018இல் ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். எங்கள் கற்பனையில் தோன்றியதை மட்டுமே நாங்கள் பாடி வந்தோம். இதை கேட்டு இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
லூலு ஹசிமோட்டோ எனப் பெயரிடப்பட்ட உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மையை ஜப்பானைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார். இது அனைவரையும் அங்கு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அழகிப் போட்டி ஒன்றில் அரை இறுதிக்குத் தேர்வான 134 மாதிரிகளில் ஹசிமோட்டோவும் ஒன்று என்பது தான் ஆச்சர்யம்.
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார். உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
மரக்கிளையில் பறவைகள்தான் கூடு கட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பறவைகள் மத்தியில் மரக்கிளையில் வீடுகள் கட்டினால் எப்படி இருக்கும். அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வடக்கு கர்நாடாகா. அங்கே தண்டேலி என்பது கோவா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இங்கு தரையில் இருந்து 40 அடி உயரத்தில் ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் அமைந்துள்ளது. இது ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஆகும். இது தண்டேலியின் கணேஷ்குடி பகுதியில் காளி நதி மற்றும் தடிமனான காடுகளுக்கு நடுவே அடர்ந்த மரங்களில் கிளைகளுக்கு மத்தியில் கனமான மூங்கில்களால் கட்டப்பட்ட குடிசை பாணியில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் ஒரு சொர்க்கமான இடமாக திகழ்கிறது. என்ன தண்டேலிக்கு செல்ல ரெடியா...
ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு
23 Nov 2025கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
-
உத்தரகாண்டில் 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்
23 Nov 2025டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கடலூர் கனமழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
23 Nov 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் கலெக்டர் மரியாதை
23 Nov 2025கோவை : கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிக
-
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு : பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
23 Nov 2025ஜெருசலேம் : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது
23 Nov 2025பிரேசிலியா : ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
-
கரூர் விவகாரம் குறித்து விஜய் ஒருபோதும் பேசமாட்டார் : டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
23 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர்.
-
137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
23 Nov 2025கூடலூர் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து நேற்று காலை 137 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
பஞ்சாபில் 50 கி. ஹெராயின் பறிமுதல்
23 Nov 2025சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Nov 2025கோவை : கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் த
-
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம்
23 Nov 2025சென்னை : 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி மோசடி : சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23 Nov 2025சென்னை : பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.
-
ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
23 Nov 2025ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
-
திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல்
23 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் நேற்று திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. ஆட்சி அமைந்தால்... விஜய் அளித்த வாக்குறுதிகள்
23 Nov 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பல்
-
மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் இ.பி.எஸ். : நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம்
23 Nov 2025சென்னை : கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்: தனது அமைதி திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு ட்ரம்ப் மிரட்டல்
23 Nov 2025நியூயார்க் : ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை உக்ரைன மேற்கொள்ள தனது அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2025.
23 Nov 2025 -
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணி
23 Nov 2025சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்.
-
ஏன் விஜயை தொட்டோம் என நினைத்து வருந்த போகிறீர்கள் : காஞ்சிபுரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
23 Nov 2025காஞ்சிபுரம் : ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள் என்றும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள்
-
சண்டிகருக்கு தனி கவர்னர்:மத்திய அரசின் திட்டத்துக்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
23 Nov 2025சண்டிகர் : பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது.
-
இன்றைய ராசிபலன்
23 Nov 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Nov 2025- பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதம்.
- திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் விழா தொடக்கம்.
- திருவெண்காடு, திருக்கழுங்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இ
-
இன்றைய நாள் எப்படி?
23 Nov 2025


