பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விசயம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விசயம் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த விலகல் ஒவ்வொரு ஆண்டும் 1.48 அங்குலம் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது நகங்கள் வளரும் வேகத்துக்கு இணையாக. அதே போல தொடக்கத்தில், அதாவது நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்துச்சாம்.. அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல். இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலவை காட்டி சோறூட்ட முடியாது, காதலர்கள் நிலவை உதாரணம் காட்டி பாட முடியாது என்றால் ஆச்சரியம் தானே.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
குழந்தைகள் அழுவது, நீர் வீழ்ச்சி, புலியின் ஓவியம், தாஜ்மஹால், மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம். அதாவது, மேற்கண்ட ஓவியங்களை வைத்தால் சண்டை, மன அழுத்தம், வாக்குவாதங்கள், துரதிஷ்டம் ஏற்படுமாம்.
இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.
ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம். இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் அவர்களின் பணி. இதுபோக, திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீபங்களும் கொண்டு விதானத்தை அலங்கரிக்கப்பதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது. ஆலயத்தின் முன்னாள் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ற மிகப்பெரிய சதுக்கம் உள்ளது. இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கும் மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.
வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் கூறுகையில், தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார்.நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
02 Oct 2025விருதுநகர், த.வெ.க. தலைவர் விஜயின் இதயத்தில் வலி இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானர் கூறினார்.
-
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய அச்சமா? திருமாவளவன் கேள்வி
02 Oct 2025சென்னை, த.வெ.க.
-
பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகனை நியமித்தார் ராமதாஸ்
02 Oct 2025சென்னை, பா.ம.க. இளைஞர் சங்கத்தின் தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் செய்யப்பட்டார்.
-
புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்: நிதின் கட்கரி அடிக்கல்
02 Oct 2025புதுச்சேரி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதுச்சேரியில் இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கு மத்திய அமைச்சர் நித
-
நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிகள் நிர்வாகம் அறிவிப்பு
02 Oct 2025தூத்துக்குடி, நெல்லை - திருச்செந்தூர் இடையே நேற்றும், இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
02 Oct 2025திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
02 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் பதில்
02 Oct 2025சென்னை, பா.ஜ.க.வின் பிடியில் இருக்கிறாரா விஜய் என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
-
த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்குப்பதியப்படவில்லை? தி.மு.க. செய்தித் தொடர்பாளர் விளக்கம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. தலைவர் மீது ஏன் வழக்கு இல்லை என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
சென்னை கடற்கரை அருகே வரும் 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படை பயிற்சி
02 Oct 2025சென்னை, சென்னை கடற்கரை அருகே வருகிற 5, 6-ம் தேதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் சார்பில் பயிற்சி நடைபெறுகிறது.
-
நாடு முழுவதும் புதிய 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கல்
02 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்: ராஜ்நாத்சிங் பேச்சு
02 Oct 2025அகமதாபாத், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
கார்கேவிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி
02 Oct 2025புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
-
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம்
02 Oct 2025சென்னை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,இணைச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன்: அதிபர் ட்ரம்ப்
02 Oct 2025வாஷிங்டன், சீன அதிபரை 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் மகளை பட்டினி போட்டு கொன்ற இந்திய வம்சாவளி பெற்றோர்..!
02 Oct 2025லண்டன், இங்கிலாந்தில் 3 வயது மகளை இந்திய வம்சாவளி பெற்றோர் பட்டினி போட்டு கொன்றனர்.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
02 Oct 2025தூத்துக்குடி, இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
-
500 பில்லியன் டாலரை நெருங்கிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
02 Oct 2025நியூயார்க், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலரை நெருங்கியது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
02 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
-
விழுப்புரம் அருகே பயங்கரம்: கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி
02 Oct 2025விழுப்புரம், விழுப்புரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்க வரிவிதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு
02 Oct 2025மும்பை, அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கை அவர்களின் சொந்த நலனை மனதில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அனைவரும் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
-
தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு நடவடிக்கை
02 Oct 2025புதுடெல்லி, தென் சீனக் கடலில் இந்திய கடற்படை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
எத்தியோப்பியாவில் பயங்கரம்: தேவாலயத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 36 பேர் பலி..!
02 Oct 2025அடிஸ்அபாபா, எத்தியோப்பியாவில் உள்ள தேவாலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐரோப்பிய பெண்ணை பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்தவருக்கு சிறை
02 Oct 2025மதுரா, ஐரோப்பிய பெண்ணை மோசடி, பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் சிறையும் தாயாருக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை உயர்வு
02 Oct 2025கொடைக்கானல், கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் வருகை அதிகரித்தால் சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.