முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் ஒரு விநோத கிராமம்

அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..

நெல்சன் மண்டேலா

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியும் அணையாமல் தீபம் எரியும் கோயில்

நாமக்கல் மாவட்டம்  மோகனூர். இங்கே, ஊருக்குள், காவிரிக் கரையோரத்தில் உள்ளது ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அப்படி என்ன சிறப்பு. எத்தனையோ உள்ளன. பாடல் பெற்ற தலம். திருக்கார்த்திகை தீபத் திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. சுவாமி முன் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் எரிவதாலேயே அவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ஒரு முறை காவிரியில் வெள்ளம் வந்து கோயில் மூழ்கிய போதும் தீபம் மட்டும் விடாமல் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago