எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நேற்று காலை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்தி காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம்.
உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.
உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது.
தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது.
சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது. துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது. ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.
காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன்.
நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன். கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை.
ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர். ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள்.
வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.
நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரை புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.
மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 18 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 14 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு
21 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
-
ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலரஞ்சலி
21 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சல
-
சென்னை பிராட்வே பஸ் நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
21 May 2024சென்னை, நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
காவிரி ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
21 May 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகதாது அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத
-
வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது : 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
21 May 2024சென்னை : வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகுவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
-
மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் நீட்டிப்பு
21 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இதே
-
தமிழ்நாட்டு மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
21 May 2024சென்னை : தமிழக மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு
21 May 2024கோபி : ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 2வது கட்டம் ஜூலையில் தொடக்கம்
21 May 2024சென்னை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.ம்.சி. நீரை திறக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
21 May 2024டெல்லி : தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த பிரபல யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
21 May 2024சென்னை, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
-
கர்நாடகத்தில் துணை நடிகை கொலை: தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு
21 May 2024மைசூரு, கர்நாடகத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள வித்யாவின் கணவர் நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
-
பிரிட்டன் தேர்தலில் இந்தியர் போட்டி
21 May 2024லண்டன், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவர், அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
-
15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 May 2024சென்னை, 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என்று தெரிவித்துள
-
தீவிர காற்று சுழற்சி: சிங்கப்பூர் சென்ற விமானத்தில் திடீர் நடுக்கத்தால் பயணி பலி
21 May 2024பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
கோடை விடுமுறையையொட்டி நெல்லை - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு
21 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியே தெரியும் நந்தி சிலை
21 May 2024சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்ததால் நீர் தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
மக்கள் அச்சமில்லாமல் பயணிக்க உடனடியாக புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
21 May 2024சென்னை, மக்கள் அச்சமில்லாமல் பயணிக்க உடனடியாக புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பட்டப்பகலில் மர்மநபர்கள் அட்டூழியம்: காரைக்குடியில் 80 பவுன் தங்கநகைகள் வழிப்பறி
21 May 2024காரைக்குடி, காரைக்குடியில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்கநகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியை, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிப்பறி செய்து கொள்ள