எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
புதுடெல்லி, ஆக.1 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில் 2 ஜி. ஸ்பெக்ட்ரம், தனி தெலுங்கானா, லோக்பால் மசோதா, வெளிநாட்டு கறுப்புப்பணம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் அரசியல் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது 2 ஜி. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இப்போது மீண்டும் கூட்டப்பட்டுள்ளது. இப்போது கூட்டப்பட்டுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுமுதல் செப்டம்பர் 8 ம் தேதிவரை 5 வாரங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதமே கூட்டப்படுவதாக இருந்தது. ஆனால் ஊழலுக்கு எதிரான லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கூட்டத்தொடர் தாமதமாக இன்று துவங்குகிறது.
கடந்த கூட்டத்தொடர்களைப் போல் அல்லாமல் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை இம்முறை மிகத் தீவிரமாக கையில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா சி.பி.ஐ. கோர்ட்டில் வாதாடியபோது பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த மாதம் 13 ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் அடிக்கடி நடைபெறும் இந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சனை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து இம்மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரச்சனை கிளப்பலாம் என்றும் தெரிகிறது.
வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கறுப்புப்பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்த கறுப்புப்பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவருவது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி பாகுபாடின்றி போராடி வருகின்றனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் பிரச்சனை எழுப்பப்படும் என்று தெரிகிறது.
கம்பெனிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தீர்க்கமான கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிட்டுள்ளன. மேலும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் இந்த பாராளுமன்ற தொடரில் பிரச்சனை கிளப்பப்படும் என்று தெரிகிறது.
லோக்பால் மசோதா, மும்பை தொடர்குண்டுவெடிப்பு, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம், நிலம் கையகப்படுத்துதல், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுப்பு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் விவகாரத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது : கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
16 Jun 2024சென்னை : உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jun 2024மதுரை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2024சென்னை : சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
மொட்டை போட்டு, நாக்கில் அலகு குத்தி திருத்தணியில் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை சரண்யா
16 Jun 2024திருத்தணி : தீவிர முருக பக்தரான நடிகை சரண்யா, வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி, அலகு குத்தி உள்ளார்.
-
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது : எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பதில்
16 Jun 2024புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில
-
டீப் பேக் வீடியோ விவகாரம்: பார்லி. கூட்டத் தொடரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்
16 Jun 2024புதுடெல்லி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக டீப் பேக் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுத்திட டிஜிட்டல் இந்தியா மசோதா கொண்டு வர மத்