முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

எளிய வழி

வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் கிராம்பை தூள் செய்து கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினாலும் தலைவலி நீங்கும். துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

விமானத்தில் சாப்பிடும் போது உணவின் ருசி குறைவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா?

நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானம் அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது. விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன.

மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைவு

உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.மேலும் மனிதர்கள், மரங்கள் விகிதமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 1,92,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் மனித நாகரீகம் தொடங்கிய போது இருந்த மரங்களின் எண்ணிககையை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக  Nature என்ற ஆய்விதழிலும் கட்டுரை வெளியாகியுள்ளது. காடு அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம். தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்கிறது ஆய்வு.

குறைந்த விலையில்...

ஆளில்லா தானியங்கி விமானங்களும், வழக்கமாக வானில் இயக்கப்படும் மற்ற விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க சென்ஸ்ஃப்ளே (SenseFly) என்ற நிறுவனத்தின் சார்பில் இதற்கான செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அறிவுறுத்தும் ஆவல்

புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருந்தால், பித்தப்பை மற்றும் கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இறைச்சிகளின் மீது நாட்டம் இருந்தால், உடலுக்கு புரோட்டீனை தேவை என்று அர்த்தம். சர்க்கரை  மீது ஆவல் அளவுக்கு அதிகமாக நாம் சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்று அர்த்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago