Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

கிணறுகள் வட்ட வடிவில் இருப்பது ஏன் தெரியுமா?

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும். கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணங்கள் இருக்கின்றன. வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம், வட்டம் என்பது இரண்டு அரை வட்ட வளைவுகள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது. பொதுவாக ஆர்ச் எனப்படும் அரை வட்ட வடிவம் கொண்ட வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் அரை வட்ட வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கங்களிலும் கிணற்றின் வடிவம் சிதையாமல் இருக்க செய்வது அதை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள் தான் காரணமாகின்றன. இதனால் அவை மண், கல் சரிவு ஏற்படாமலும், கிணறு உறுதியாகவும் இருப்பதற்கு உதவுகின்றன. கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

கிரேக்கர்களால் கட்டப்பட்ட ஆப்கன் நகரம்

கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாவிலையின் மகிம்மை

மாவிலைத் தோரணத்தை வீட்டு வாசலில் கட்டுவதால், அவை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் நமக்கு கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும் வீட்டு வாசலும் பச்சை பசேல் என மங்களகரமாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago