முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காந்தியின் அஸ்தி அமெரிக்காவில் பாதுகாக்கப்படுகிறதா? - தொடரும் சர்ச்சை

அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹம்ச யோகானந்தா. இது 1950ல் கட்டப்பட்டது. இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் அஸ்தி இருப்பதாக கூறப்படுகிறது. 1948ல் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அவரது அஸ்தி 20 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கு மக்கள் நினைவுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் எப்படியோ வெளிநாடு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. தற்போது அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நதி தீரத்தில் கரைக்க வேண்டும் என காந்தியின் பேரனான துஷார் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். இது எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது என காந்தி குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் டைரி

டைரி எனப்படும் நாட்குறிப்பு உலக வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய ஒன்று என்று சொல்லலாம். காகிதங்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டைரிகளில் தங்களது அன்றாடங்களை யார் இப்போது எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எழுத விரும்புபவர்களுக்கு வந்து விட்டது டிஜிட்டல் டைரி. டிஜிட்டல் டைரிகளில் நீங்கள் உங்கள் போட்டோ அல்லது வீடியோவையும் இணைக்க இயலும் அதோடு அதை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்தும் வைக்கவும்  முடியும் இதன் மூலன் நம்மை ஆராய்ச்சு செய்யும் கண்களிடமிருந்து தப்பிக்க இயலும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி தானே...

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகச்சிறிய நாடு

இத்தாலி அருகே உள்ள உலகின் மிகச்சிறிய நாடாக தவோலாரா என்னும் தீவு உள்ளது. இங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையே வெறும் 11 தான் ஆகும். இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டும்தான். இந்த குட்டி  தீவின் மன்னர் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago