முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

நீண்ட தொலைவு பறக்கும் பறவை இனம் எது தெரியுமா?

றவைகளின் இடப்பெயர்ச்சி மனிதர்களுக்கு வியப்பையே அளித்து வந்திருக்கிறது.பல ஆயிரம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை, இதற்கான துல்லியமான, மிகச் சரியான விடை கிடைக்கவில்லை. ஓர் ஆண்டில் 22,000 மைல்கள் வரை பறக்கக் கூடிய வடதுருவப் பகுதியில் உள்ள டெர்ன் பறவைகள் (arctic terns) மிக அதிக தூரம் பயணம் செய்யும் பறவை இனமாகும். இப்பறவைகள் வட துருவத்திலிருந்து தென் துருவப் பகுதிக்கு (the Antarctic region) இருபது வாரங்களில் நாளொன்றுக்கு 150 மைல் வேகத்தில் பறந்து செல்லக்கூடியவை ஆகும்.பெரும்பாலான தரை வாழ் பறவைகள் தமது இடப்பெயர்வின் போது குறைந்த அளவே பயணம் செய்கின்றன. ஆனால் அமெரிக்க கோல்டன் ப்ளோவர் (American golden plover) என்னும் பறவை இனம், தங்கு தடையின்றி நீண்ட தூரம் பயணம் செய்யும்; இப்பறவை சுமார் 2400 மைல்கள் தடையின்றி பயணம் செய்யக்கூடியதாகும்.

மோப்ப சக்தி

நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற கருத்து உள்ளது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா என்பவர் வெளியிட்ட கட்டுரையில் விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்திருந்தது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.

வைரத்தை முதன் முதலாக வெட்டி எடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

 இன்றைக்கு உலகிலயே அதிக விலையுள்ள ஆபரணம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள்.. அது வைரம்தான். அது சரி இந்த வைரம் எங்கிருந்து எப்போது முதன் முதலாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியுமா.. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தான் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குண்டூர் டெல்டா பகுதிகளில்தான் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் வரை உலகின் வைர சந்தையில் இந்தியாதான் நம்பர் ஒன். இந்தியாவிலிருந்து அந்நிய படையெடுப்புகளால் கொள்ளை போன் முக்கிய தொல் பொருள்களில் விலையுயர்ந்த வைரங்களும் அடக்கம். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று தானே

புதிய அவதாரம்

கலை,விஞ்ஞானம்,அறிவியல், என இருந்துவரும் ரோபோக்களின் சேவை தற்போது விவசாயத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய பணிகளையும் ரோபோவே செய்துள்ளது. இதற்கான சாதனையை இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனாதன்கில் தலைமையிலான குழுவினர் படைத்துள்ளனர். இந்த ரோபோக்கள் பார்லியை விதைத்து சமீபத்தில் அறுவடை செய்தது. இவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிகளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியுமாம்.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago