Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வெறும் வயிற்றில் ....

காலை வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம். அதில் உள்ள ‘காபின்’ வயிற்று உபாதைகள் மற்றும் குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும். சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்புகளை சாப்பிட்டால் இன்சுலின் அளவை அதிகரிக்கும். தயிர் சாப்பிட்டால் அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

மறதி நோய்

வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாக அல்சைமர் எனும் மறதி நோய் ஏற்படுவதாக நம்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய அப்டேட்

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு நமது உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் ரியாக்‌ஷன் பட்டன்கள் உள்ளன.  பேஸ்புக்கில் கடந்த ஆண்டில் மட்டும் 300 பில்லியன் தடவை இதை பயன்படுத்தியுள்ளனர். லைக் பட்டன்கள் மட்டுமே இதுவரை இருந்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பில் டிஸ்லைக் பட்டன் விரைவில் வரவுள்ளது.

வெள்ளை மாளிகையில் முதலை வளர்த்த அதிபர்

அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் John Quincy Adams இவர் 1825 முதல் 1829 வரை அதிபராக இருந்தார் அப்போது அவருக்கு பிரெஞ்சு தூதர் முதலை ஒன்றை செல்லப்பிராணியாக பரிசாக வழங்கினார் அந்த முதலையை ஜான் குவின்சி வெள்ளை மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் வளர்த்து வந்தார் அங்கு அது ஜாலியாக நீந்தி விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் இவர் முற்றிலும் வித்தியாசமான அதிபர் தானே.

அம்பானி வீட்டில் 180 ஆண்டுகள் பழமையான 2 மரங்கள் : விலை ரூ.84 லட்சம்

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் என 12, 000 கிமீ வியக்க வைக்கும் பயணம்

குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணித்ததை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். குளிர்காலங்களில் சாம்பியாவில் வாழும் இந்த பறவை 16 நாடுகளை தாண்டிப் பறந்துள்ளது. வழியில் பெருங்கடல், அதிக காற்று என அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது. இது ஒரு வியக்கத்தக்கப் பயணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஓனன் என்று அழைக்கப்படும் பறவை மட்டுமே இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஓனன் பறவை ஓய்வேதும் எடுக்காமல் இந்தியப் பெருங்கடலை மணிக்கு 60 கிமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கென்யா, செளதி அரேபியா மற்றும் வங்கதேசம் என உலகின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நாடுகளையும் தனது பயணத்தில் கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago