முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிடைத்தது ஆதாரம்

லிபியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் கிடைத்த ஆதாரங்களின் படி, மனிதர்கள் 10,000 வருடங்களுக்கு முன்பே காட்டு தானியங்கள் மற்றும் தாவரங்களை வைத்து பானைகளில் சமைத்துள்ளது தெரிய வந்தள்ளது. ஆரம்பத்தில் சைவமாகத்தான் இருந்த மனிதர்கள் , பின் விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடும் அசைவத்திற்கு மாறியிருக்கின்றனர்.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

சூரியனால் ஆபத்து

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது. உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் சூரியனால்  பூமியின் அழிவு நிச்சயம். மேலும் புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் அழியும் ஆபத்தும் உள்ளதாம்.

கொழுப்பை குறைக்கவும்

உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுள்ளனராம். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் மக்களிடம் அதிகம் கவனம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் குண்டானவர்கள் என்றும் குண்டாவதற்கு உடலில் சேரும் கொழுப்பு தான் முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நிலத்தின் அடியில் உள்ள நீரை இப்படியும் கண்டுபிடிக்கலாம்

இன்றைய நவீன கால கட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. அதற்காக நிலத்தடி நீரை கண்டுபிடிக்க நவீன உத்திகளும், பழைய முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனாலும் தோண்டினால் தண்ணீர் வருவதில்லை... வெறும் காற்றும் மண்ணும் தான் வருகிறது. ஆனால் பண்டைய விவசாய காலங்களில் நிலத்தடி நீரை மிக சுலபமாக நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி...ஒரு விவசாயி கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு புறமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அவற்றை கவனித்தால், அவை மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்துதான் அசை போடுமாம். இவ்வாறு தொடர்ந்து 4, 5 நாட்கள் கூர்மையாக கவனித்தால், அவை ஒரே இடத்தில் தான் படுக்குமாம்.  அந்த இடத்தை தோண்டினால் அற்புதமான குளிர்ந்த நீர் கிடைக்கும்..இயற்கையையே அறிவியலாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்கச் செய்கிறது அல்லவா?š

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago