மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொறுத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும். கார்டக்ஸ் - எம்.ஒ எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தொடர்ச்சியாக செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டு நண்பர்களிடம் எப்போது பார்த்தாலும் கருத்து கேட்பது. செல்ஃபிசைடு என அழைக்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களில் மூன்று பெண்கள் செல்ஃபிசைடால் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, செல்ஃபியும் கூட ஆபத்துதான்.
ஒடிசா மாநிலம் ராய்ப்பூர் பாலங்கீரியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவருக்கு கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர். ஆகஸ்ட் மாதம் தம்பதியினர் ராய்பூர் மற்றும் ஜான்சி வழியாக ராஜஸ்தானுக்கு செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு தங்கிய சில நாட்களில், தனது மனைவியை ரூ.1.8 லட்சத்திற்கு பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவருக்கு சிறுவன் விற்றுள்ளார். மனைவியை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார். பிறகு ஒரு ஸ்மார்ட் போனும் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊர் திரும்பி உள்ளார். ஊர் திரும்பியவரிடம் மனைவியை எங்கே என குடும்பத்தினர் கேட்டபோது, அவர் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் ஓடி விட்டதாக கூறி உள்ளார். இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. தற்போது சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார் அந்த சிறுவன்.
இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.
உலக அளவில் புகழ் பெற்ற இசைக்குழுவினர்களில் பீட்டில்ஸ் குழுவினருக்கு முதலிடம் உண்டு. ராக் இசை குழுவினரான இவரது பாடல்கள் ஒரு காலத்தில் இசை ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்து கொண்டிருந்தது. உலகம் முழுவதும் தங்களது இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயங்க வைத்தனர். ஆனால் இந்த குழுவில் உள்ள யாரும் முறைப்படி இசை கற்றுக் கொண்டது கிடையாது. இசையை எழுதவோ, படிக்கவோ அவர்களுக்கு தெரியாது. இதை அக்குழுவில் உள்ள முக்கிய இசைஞர் பால் மெக்கார்டினி கடந்த 2018இல் ஒரு பேட்டியின் போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். எங்கள் கற்பனையில் தோன்றியதை மட்டுமே நாங்கள் பாடி வந்தோம். இதை கேட்டு இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 3 டேப்லெட் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. எம்ஐ பேட் 3 டேப்லெட் 128GB விலை இந்திய மதிப்பில் ரூ.20,000 வரை இருக்கும் என்றும் 256GB விலை ரூ.22,500 வரை இருக்கும். இத்துடன் புதிய காந்த சக்தி கொண்ட கீபோர்டு ஒன்றையும் சியோமி அறிவித்திருக்கிறது. இதன் விலை ரூ.1000 என கூறப்படுகின்றது. 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் டிஸ்ப்ளே, 2.6 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் இன்டெல் பிராசஸர் மற்றும் 8GB ரேம் வழங்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


