முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மழை காலமும் உணவும்

மழைக்காலத்தில் விட்டமின் சி நிறைந்த பேரிக்காய், மாதுளை, மிளகு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். கிருமிகளை அழித்துவிடும். பூண்டு உடலுக்கு சூட்டை தரும். இஞ்சி வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் மலச்சிக்கலை தடுக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

ரகசியமாக சமூக சேவை ஆற்றி வந்த 9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. இவர்கள் 30 ஆண்டுகளாக ரகசியமாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விஷயம் அவர்களது கணவன்மார்களுக்கு கூட தெரியாது. அவர்கள் அனைவரும் அதிகாலை 4 மணிக்கு ரகசியமாக சந்தித்து கொள்வர். தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை போன்ற தங்களால் ஆன சேவைகளை செய்து வந்தனர். இவை அனைத்தையும் தங்களது வீடுகளிலேயே தயாரித்து கொண்டு வந்தும் கொடுத்தனர். அவர்கள் அளிக்கும் அந்த பைகளில் உங்களை சிலர் நேசிக்கின்றனர் என எழுதப்பட்டிருக்கும் என்றால் ஆச்சரியம் தானே..

தெரிந்தும் தெரியாதது

ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான முட்டாள்கள் நாளின் உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை. புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது.

வலிமை ஆக்கும்

சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

உடலுக்கு நன்மை

வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவினால், வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும். வலியை போக்கும். பதட்டத்தை தணிக்க கூடியது. நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் வசம்பு, இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும். ரத்தத்தை சுத்தப்படும்.

வேகம் அதிவேகம்

ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago