நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஈசன் வழக்கம்போல் தன் திருவிளையாடல்களைக் காட்ட மாறுவேடம் பூண்டு எல்லாம் வல்ல சித்தராக மதுரைக்கு வந்தார். அப்போது மதுரையை ஆண்டவர் மன்னர் அபிஷேகப் பாண்டியன். இப்படி ஒரு சித்தரைப் பற்றி அறிந்ததும் அவரை சந்திக்க ஓடோடி சென்று, அவரின் பலத்தை சோதிக்கவேண்டும் என்று கூறி, சிலையாக இருந்த யானையை கரும்பு சாப்பிட வைத்து உங்கள் வல்லமையை நிரூபியுங்கள் என்றாராம். உடனே கல் யானை கரும்பை திண்றது. உடனே சித்தரின் மகிமையை புரிந்த மன்னர் மன்னிப்பு கேட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகில்தான் இந்த ‘எல்லாம் வல்ல சித்தர்' சன்னிதி உள்ளது.
பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை
மனிதர்களுக்கு அதிலும் பயிற்சி பெற்றவர்களுக்கே சும்மா ஒரு 2 கிமீ ஓடினாலே நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். 13 ஆயிரம் கிமீ அதிலும் 10 நாட்கள் நிற்காமல் அன்னம் தண்ணி புழங்காமல் ஒரு சிறிய பறவை பறக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. Bar-tailed Godwit என்ற நாரை வகையைச் சேர்ந்த பறவைதான் இந்த சாகசக்காரி. அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் இது இனப்பெருக்கத்துக்காக பசிபிக் பெருங்கடலை கடக்கிறது. 13 ஆயிரம் கிமீ கடந்து நியூஸிலாந்து செல்கிறது. இடையில் எங்கும் நிற்காமல்.. எங்கு நிற்க.. அதுதான் கடலாச்சே.. இரை தண்ணீர் கூட எடுக்காமல் 10 நாள் பயணம். இதை நம்பாத விஞ்ஞானிகள் இருக்கிறார்களே... அதற்காகவே இதன் காலில் ஜிபிஎஸ், சென்சர் என்ற கண்ட கருமாந்திரங்களையும் வைத்து ஆராய்ந்ததில் அது உண்மை தான் என்பது உறுதியானது. ஆனால் எப்படி? 10 நாள் எதுவும் சாப்பிடாமல்... விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் Bar-tailed Godwit அது தன்பாட்டுக்கு கடல் மீது பறந்து கொண்டிருக்கிறது.
சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் 1974 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் தடயம் ஒன்றை கண்டறிந்தனர். அங்கு தோண்டிய போது சுமார் 8 ஆயிரம் களிமண் வீரர்களின் அணிவகுப்பு சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெரகோட்டா ஆர்மி என அழைக்கப்படும் இந்த இடம் சுமார 98 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கின் வம்சத்தின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் கிபி 246 இல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது வரை இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம்: நாளை தொடங்கி வைக்கிறார்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
10 Dec 2025சென்னை, 2-ம் கட்ட மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை ஆய்வு செய்த தொல்லியல்துறை குழு
10 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
10 Dec 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
10 Dec 2025சென்னை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி குறித்து முடிவெடுக்க இ.பி.எஸ்.சுக்கு அதிகாரம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
10 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு ரூ.12,000 மாத ஓய்வூதியத்திற்கான ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை. ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
10 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் ஆலோசனை நடைபெறுகிறது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
10 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நேற்று தொடங்கிய நிலையில், எஸ்.ஐ.ஆர்.
-
உணவு தானியங்களை சேமித்து வைக்க 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
10 Dec 2025சென்னை, ரூ.13.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்து, உணவு தானியங்களை சேமித்து வைக்க திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.3
-
9-வது நாளாக தொடர்ந்த சிக்கல்: 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
10 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் நேற்றும் (டிச. 10) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
-
4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் அமைச்சர் வழங்கினார்
10 Dec 2025சென்னை, 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது: சி.வி.சண்முகம்
10 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
-
ஆணவம் பிடித்த டெல்லிக்கு தமிழ்நாடு என்றைக்குமே அவுட் ஆப் கன்ரோல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
10 Dec 2025சென்னை, எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...?
-
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
10 Dec 2025துபாய், ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய முன்னணி வீரர் 2 இடங்கள் முன்னேறி கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
10 Dec 2025சென்னை, வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
10 Dec 2025புதுடெல்லி, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
-
மீண்டும் இ-மெயில் மூலம் ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை
10 Dec 2025சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அபார வெற்றி....
-
3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
10 Dec 2025புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
-
ஆஸி.,யில் அமலுக்கு வந்தது 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்ளை பயன்படுத்த தடை
10 Dec 2025கென்பரா, 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்தது.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்
-
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை
10 Dec 2025திருப்பதி, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



