எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச்.29 - ஸ்பெக்ட்ரம் ஊழலை டாமின் கிரானைட் சுரங்க ஊழல் மிஞ்சியுள்ளது. இந்த டாமின் கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக வீடியோ ஆதாரங்களுடன் கருணாநிதிக்கு புகார் கொடுத்தும் டாமின் சுரங்கத்தில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது.
தமிழக அரசு தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 108 கிரானைட் சுரங்கங்களுக்கு தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. கருணாநிதி ஊழல் செய்வதற்கு தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தி வருகிறார்.
கிரானைட் சுரங்கம்
ரூ.1,500 கோடி கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் சட்டவிரோதமாக கடத்தி அவர்களது இடத்தில் சட்டவிரோதமாக கடத்தி வைத்திருப்பதாக தினபூமி நாளிதழ் 20.7.2010-ம் தேதியன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளிவந்ததும் தினபூமி ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மேலூர் தாலுகா கீழையூர் கிளை செயலாளர் எம்.முத்தையா ஆகியோரை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அவசர அவசரமாக அடுத்த நாளே சிறையில் இருந்து விடுதலை செய்தனர். இதன் பின் பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி ஸ்டாக் வைத்துள்ள கற்கள் எங்கு இருந்து கடத்தி வரப்பட்டது என்று ஆய்வு செய்ததில் இந்த கற்கள் அனைத்தும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து திருட்டுத்தனமாக கடத்திவரப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த டாமின் கிரானைட் சுரங்க ஊழலை கண்டு பிடிக்க மிகபெரிய புலனாய்வு வேட்டையை தினபூமி நாளிதழ் நடத்தியது. இந்த வேட்டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கம் இருக்கும் பகுதியில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இந்த வேட்டையில் இந்தியாவிலேயே யாரும் பயன்படுத்தாத புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த வேட்டையில் டாமின் சுரங்கங்களில் இருந்து கிரானைட் கற்களை வெட்டுவது, வெட்டிய கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவன லாரிகளில் ஏற்றுவது, டாமின் சுரங்கங்களில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் முத்திரை இல்லாமல் லாரிகளில் திருடி எடுத்து வருவது. இந்த லாரிகள் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் செல்வது அங்குள்ள கிரேன்கள் மூலம் பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்குள் இறக்கி வைப்பது உட்பட அனைத்து காட்சிகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேட்டை பலமாதங்கள் நடத்தப்பட்டது.
தினமும் 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்கள் கடத்தல்
இந்த வேட்டையில் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் தினமும் அதிகபட்சமாக 765 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களும் சராசரியாக 551 கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களையும் டாமின் முத்திரை இல்லாமல் பி.ஆர்.பி. நிறுவனம் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் 1.4.2010 முதல் 9.3.2011 முடிய சுமார் 1 வருட காலத்திற்கு வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து டாமின் நிறுவனம் 191 கியூபிக் மீட்டருக்கு மட்டும் பெர்மிட் வாங்கி உள்ளது. ஆனால் தினமும் சராசரியாக 551 கியூபிக் மீட்டர் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் திருடி கடத்தி வருகிறது. இதுபோல வருடத்திற்கு சுமார் 2 லட்சம் கியூபிக் மீட்டர் கிரானைட் கற்களை பி.ஆர்.பி. நிறுவனம் இந்த ஒரு டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் கொள்ளை அடித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் 5 வருடங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்து இதுபோல கற்களை கடத்தி இருந்தால் இந்த ஒரு சுரங்கத்தில் இருந்து மட்டும் கடத்தப்பட்ட கற்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4000 கோடியாகும். இது போன்ற கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.5 லட்சம் கியூபிக் மீட்டர் கற்களை கீழவளவில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் பி.ஆர்.பி. நிறுவனம் பதுக்கி வைத்துள்ளது.
பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியது வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து கடத்தியதாக கூறப்படும் கற்கள் மட்டும் அல்ல புறாகூட்டுமலை மற்றும் பொக்கிஷமலை ஆகிய இடங்களில் இருத்தும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்கள் காணாமல் போய் உள்ளது. இங்கும் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் வேலை செய்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 டாமின் சுரங்கங்களில் இருந்தும் இதே போல கிரானைட் கற்கள் கடத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் சுரங்கங்களில் இருந்து சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தப்பட்டிருக்கலாம். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள டாமின் கிரானைட் சுரங்கங்களை அளவு எடுத்தால் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் டாமின் கிரானைட் சுரங்க ஊழல் வெளிவரும்.
ரூ.3 லட்சம் கோடி டாமின் சுரங்க ஊழல் கருணாநிதிக்கு தொடர்பு
கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் டாமின் நிறுவனம் அனுமதி பெற்றுள்ள டாமின் சுரங்கத்தில் இருந்து சிந்து கிரானைட் நிறுவனம் திருட்டுத்தனமாக கொள்ளை அடித்து வருவதாக கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் எம்.முத்தையா என்பவர் 2.4.10. 15.5.10, 14.7.10, 27.10.10 ஆகிய தேதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் முதல்வர் கருணாநிதிக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். மேலும் பி.ஆர்.பி. நிறுவனம் விதிமுறைகளை மீறி 1500 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை கடத்தியது சம்பந்தமாக சாட்டிலைட் மற்றும் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதியன்றும் மேலும் வெள்ளூத்துமலை டாமின் சுரங்கத்தில் இருந்து பி.ஆர்.பி. நிறுவனம் டாமின் முத்திரை இல்லாமலும், பெர்மிட் இல்லாமலும் சராசரியாக தினமும் 551 கியூபிக் மீட்டர் கற்களை திருடி கொள்ளை அடித்து பி.ஆர்.பி. நிறுவன இடத்திற்கு கடத்தி செல்வதற்கான வீடியோ ஆதாரங்களுடன் ரமேஷ்குமார் 17.3.11 அன்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் இந்த டாமின் சுரங்க கடத்தலுக்கு காரணமான பி.ஆர்.பி. நிறுவனத்தின் பி.பழனிச்சாமி, சுரங்கதுறை உதவி இயக்குனர், மதுரை மாவட்ட ஆட்சிதலைவராக இருந்த காமராஜ் மற்றும் உயர்அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதிக்கு புகார் அனுப்பியும் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து டாமின் கிரானைட் சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. டாமின் சுரங்க ஊழலில் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதால்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
கிரானைட் சுரங்க ஊழல் புகார் மீது இதுவரை கருணாநிதி எடுத்த நடவடிக்கை என்ன?
கிரானைட் சுரங்க ஊழல் புகார் மீது இதுவரை முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பதில் கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டதற்காக பொய் புகாரின் அடிப்படையில் தினபூமியின் ஆசிரியரையும், கிரானைட் சுரங்க ஊழல் சம்பந்தமாக புகார் கொடுத்ததற்காக தினபூமி பத்திரிகையாளர் எம்.ரமேஷ்குமாரையும், கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் எம்.முத்தையாவையும் பொய் புகாரின் பேரில் கைது செய்ததுதான் இதுவரை கருணாநிதி எடுத்த நடவடிக்கை ஆகும்.
மோசமான முதலமைச்சர்
ஊழல் செய்வதிலும், அரசு சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களை பாதுகாப்பதிலும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். தனது குடும்பம் வளம் பெறுவதற்காக மட்டுமே செயல்படும் ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே கருணாநிதி மட்டுமே. இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை இந்தியா இதுவரை பார்த்தது இல்லை.
ஊழல் கலெக்டரை மதுரையில் இருந்து அனுப்பிய தேர்தல் ஆணையம்
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எந்த கனிமத்தையும் பெர்மிட் இல்லாமல் ஏற்றி செல்லக்கூடாது என்பது விதி ஆகும். விதிமுறைகளுக்கு மாறாக பி.ஆர்.பி. நிறுவனம் கிரானைட் கற்களை கடத்தி பஞ்சபாண்டவர் மலைக்கு அருகில் பி.ஆர்.பி. நிறுவன இடத்தில் ஸ்டாக் வைத்திருப்பதாக புகார் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த புகாருக்கு பதில் அளித்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜ் இந்த இடத்தில் வைத்திருப்பது வேஸ்ட் கற்கள் என்று பதில் அளித்தார். (பி.ஆர்.பி. நிறுவன இடத்தில் சட்டவிரோதமாக ஸ்டாக் வைத்துள்ள கற்கள் பெரும்பாலும் கேங்சா எனப்படும் 7 அடி உயரமும் 11 அகலமும் கொண்டவை. கீழவளவில் உள்ள சிறுவர்களை கேட்டால் கூட இந்த கற்கள் விற்பனைக்கு தகுதியான நல்ல கற்கள் என்று கூறிவிடுவார்கள். மேலும் 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட கற்கள் கூட எல்லா இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது) மேலும் சுரங்கமே தோண்டாத இடத்தில் இருந்தும் வேஸ்ட் கற்கள் வந்ததாக தவறான பதிலை கலெக்டர் காமராஜ் அளித்தார். மேலும் வேஸ்ட் கற்களை இந்த இடத்தில் வைத்துக் கொள்வதாக 2005-ம் ஆண்டே பி.ஆர்.பி. நிறுவனமும், முருகேசனும் கடிதம் கொடுத்துள்ளார்கள் என்றும் கூறி இருந்தார். ஆனால் வேஸ்ட் கற்களை சுரங்கத்தை விட்டு வெளி இடங்களில் வைத்துக் கொள்ள யாருக்கும் எந்த அதிகாரியும் அனுமதி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிர்ச்சி தகவலாக முருகேசன் சுரங்கம் தோண்டியதாக கூறப்படும் இடம் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். அரசு புறம்போக்கு நிலத்தில் தோண்டப்பட்ட கற்களை அரசு அனுமதி இல்லாமலும், பெர்மிட் இல்லாமலும் எப்படி எடுத்து வந்து இருக்க முடியும். மொத்தத்தில் மாவட்ட கலெக்டர் காமராஜ் துணையுடன் போர்ஜரி கடிதம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் காமராஜ் கிரிமினல்களுடன் கூட்டு சேர்ந்து கிரிமினல் வேலைக்கு துணை போய் உள்ளார். பி.ஆர்.பி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து ரூ.1500 கோடி மதிப்புள்ள கற்களை பறிமுதல் செய்வதற்கு பதில் ஊழலுக்கு துணை போய்விட்டார். மாவட்ட கலெக்டர் காமராஜ் தேர்தல் கமிஷனால் மதுரையில் இருந்து மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரையில் தொடர்ந்து பணியில் இருந்தால் தேர்தலிலும் தில்லுமுல்லு செய்துவிடுவார் என்றுதான் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டது போலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.