எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, ஜன. - 19 - இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிங்பிஷர் உள்ளிட்ட சில தனியார் விமான நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி முடிவு செய்யவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உடனடியாக ரூ. 150 கோடி வழங்கவும் பிரணாப் ஒப்புக் கொண்டார். பெரும் நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனம் தனது பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பல மாத சம்பளத்தை நிலுவை வைத்துள்ளது. இதனால் பைலட்டுகள் வேலைக்கு வராமல் மொத்தமாக விடுமுறை எடுத்து வருவதால் விமானங்களை இயக்க முடியாமல் ஏர் இந்தியா தடுமாறி வருகிறது. நிலுவையில் உள்ள சம்பள தொகையில் ஒரு பகுதியையாவது உடனடியாக வழங்க முடிவு செய்துள்ள அஜீத்சிங், நிதியமைச்சகத்திடம் ரூ. 150 கோடியை கோரினார்.இதை வழங்க பிரணாப் ஒப்புக் கொண்டார். மேலும் வி.ஐ.பிக்களுக்காக இயக்கப்பட்ட விமானங்களுக்காகவும், வி.ஐ.பிக்களுக்கு இடம் ஒதுக்கியதற்காகவும், ஏர் இந்தியாவுக்கு பல்வேறு அமைச்சகங்கள் கட்டண பாக்கி வைத்துள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடியை இந்த அமைச்சகங்கள் தர வேண்டியதுள்ளது. இதையும் விரைவில் பெற மத்திய அமைச்சர்களுடன் பேசவும் அஜீத்சிங் முடிவு செய்துள்ளார். இப்போது இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த விதியை திருத்தி வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்வதை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் ஏர் இந்தியாவிலும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அஜீத்சிங், ஏர் இந்தியாவும், ஒரு நிறுவனம்தான். அதில் பணம் போட முதலில் யாராவது முன் வரட்டும். அப்போது அது குறித்து பரிசீலிப்போம் என்றார். மேலும் விற்பனை வரி சுமையில் இருந்து தப்ப வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள தனியார் விமான நிறுவனங்ள் அனுமதி கோரி வருவது குறித்து கேட்டதற்கு இதை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். ஏர் இந்தியா இப்போது ரூ. 67, 520 கோடி கடனில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 23, ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய மத்திய அரசுக்கு செயலாளர்கள் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 6,.600 கோடியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் மத்திய அரசு முதலீடு செய்யும் என்று தெரிகிறது. மேலும் 28 புதிய போயிங், 787 விமானங்களை வாங்கவும் ஏர் இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இதை வாங்க பணமில்லாததால் அதை வாங்கி வேறு லீசிங் நிறுவனத்திடம் விற்று விட்டு பின்னர் அவர்களிடம் இருந்தே விமானங்களை வாடகைக்கு எடுத்து இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
இன்றைய தங்கம் விலை
18 Aug 2025சென்னை, இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.
-
தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகள்
18 Aug 2025சென்னை : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்
18 Aug 2025சென்னை : குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆரவு கோரினார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.
-
விடியல் பயணத்தில் ரூ.50 ஆயிரம் சேமித்த பெண்கள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
18 Aug 2025சென்னை : தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
-
த.வெ.க. மீது சீமான் விமர்சனம்
18 Aug 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகம் மீது சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
கடுக்கா இசை வெளியீட்டு விழா
18 Aug 2025விஜய் கெளரிஷ் புரொடக்ஷன்ஸ் - நியந்த் மீடியா அண்ட் டெக்னாலஜி, மலர் மாரி மூவிஸ் - கௌரி சங்கர் ரவிச்சந்திரன் - ஆனந்த் பொன்னுசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் கட
-
திரையுலகில் 50 ஆண்டு நிறைவு: நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. தலைவர் சந்திப்பு
18 Aug 2025சென்னை : திரையுலகில் 50 ஆண்டுகள் நிறை ஆனதையொட்டி நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் ஆர்.ஜே.சாய்
18 Aug 2025கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆர்.ஜே.சாய், தனது பிறந்த முன்னிட்டு இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துளார்.
-
மும்பையில் 3-வது நாளாக தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
18 Aug 2025மகாராஷ்டிர : மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வ
-
கூலி திரைவிமர்சனம்
18 Aug 2025சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதியன்று வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் கூலி.
-
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் திருமாவளவன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
18 Aug 2025சென்னை, தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடு
-
ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளி: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்
18 Aug 2025புதுடெல்லி, ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத்திறனாளி மீது வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அக்யூஸ்ட் படக்குழு
18 Aug 2025ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோரின்
-
முன்னாள் குடியரசு தலைவர் போல் உயர வேண்டும்- சி.பி.ஆர்.
18 Aug 2025புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
-
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி
18 Aug 2025தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி பெற்றுள்ளார்.
-
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
18 Aug 2025கர்நாடக : கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என்பதால், காவ
-
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
18 Aug 2025சென்னை : துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
-
நேட்டோவை மறந்து விடுங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் ‘செக்’
18 Aug 2025வாஷிங்டன் : கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
டிரம்ப் - புதின் - ஸெலன்ஸ்கி பேச்சு: உலகளவில் நடக்கும் மிகப்பெரிய விளையாட்டு -நரவனே தகவல்
18 Aug 2025டெல்லி, ரஷியா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை என்பது உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு என்று இந்திய முன்னாள் முப்படைகள் தளபதி எம்எம் நரவனே தெரிவித்துள்ளார்