எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, ஜூலை.27 - ஆன்மிக சிறப்புவாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தூத்துக்குடி மாநகரில் கடற்கரையோரம் அமைந்துள்ள 457 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய பனிமய மாதா கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருவதால் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சிறப்புபெற்றுள்ள தூய பனிமய மாதா ஆலயம் கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் நாள் பசிலிக்கா பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்ந்தது.
சிறப்புமிக்க தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பங்கு மக்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை மற்றும் கொடிபட்ட பேரணி பங்குதந்தை வில்லியம்சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் எளியோருக்கும், திருவழிபாடு, பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் பங்குமக்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டது.
தொடர்ந்து நேற்று காலை 6மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மேயர் சசிகலாபுஷ்பா, ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள், பங்குமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பின்னர் மதியம் பேராயர் ஆன்ட்ரூ டிரோஸ் அடிகளார் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்குஇறை மக்களுக்கான திருப்பலியும், இரவு செபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
விழாவில் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் 12மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் ஆடம்பரத் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை வில்லியம்சந்தானம், துணை பங்குத்தந்தை கிளைட்டன், களப்பணியாளர் பிளேவியன், பங்குபேரவையினர் மற்றும் பங்குஇறைமக்கள் செயது வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.,ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி., மகேஸ் தலைமையில் போலீசார் 24மணிநேரமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 22 hours ago |
-
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பால் என்ன பாதிப்பு? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
26 Aug 2025மகாராஷ்டிரா, இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
-
பதக்கம் வாங்க மறுத்த அமைச்சரின் மகன்: பெருந்தன்மையாக பேசிய அண்ணாமலை
26 Aug 2025புதுக்கோட்டை : பதக்கம் வாங்க மறுத்த அமைச்சரின் மகனை பெருந்தன்மையாக அண்ணாமலை பேசினார்.
-
தவறி விழுந்த இளம்பெண் மீது ஊசி குத்தியதில் இதயம் வரை புகுந்தது
26 Aug 2025நாகப்பட்டினம் : தவறி விழுந்த இளம்பெண் மீது ஊசி குத்தியதில் இதயம் வரை சென்றது.
-
தீபாவளிக்கு வெளியாகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
26 Aug 2025பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ) LIK திரைப்படம் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
-
பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிய படம்
26 Aug 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதி
-
காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்
26 Aug 2025சென்னை, தமிழக முதல்வர் கொண்டு வந்த காலை உணவு விரிவுப்படுத்துவது பலனளிக்காது என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்தின் தெரிவித்துள்ளார்.
-
சீனா அழிந்து போகும் அதிபர் டிரம்ப் மிரட்டல்
26 Aug 2025அமெரிக்கா : சீனா அழிந்து போகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
கட்டாளன் பட தொடக்க விழா
26 Aug 2025கட்டாளன் பட பூஜை சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.
-
விநாயகர் சதுர்த்தி- எடப்பாடி வாழ்த்து
26 Aug 2025சென்னை : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
மேட் இன் இந்தியா வாகனங்கள் இனி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
26 Aug 2025அகமதாபாத், மேட் இன் இந்தியா வாகனங்கள் இனி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ருத்ரம் சினிமாஸ் தயாரிக்கும் சிங்கா
26 Aug 2025ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை தயாரிக்கிறது.
-
தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு தேதி அறிவிப்பு : செப்டம்பர் 15-ம் தேதி முதல் தேர்வுகள் தொடக்கம்
26 Aug 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு 6 பேர் பலி
26 Aug 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் கனமழைக்கு சிறார்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
சுப்ரீம் கோர்ட்டுக்கு இரு புதிய நீதிபதிகள்: மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை
26 Aug 2025புதுடெல்லி, நீதிபதிகள் ஆலோக் ஆராதே, விபுல் எம்.பஞ்சோலி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது
-
பீகார் 'வாக்காளர் அதிகார யாத்திரை' ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா
26 Aug 2025பாட்னா, பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்
-
இந்தியா - பாக் மோதலின்போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீண்டும் ட்ரம்ப் சர்ச்சைப் பேச்சு
26 Aug 2025வாஷிங்டன், கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவு
26 Aug 2025ஆம்பூர் : ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக நீதி மன்றம் அறிவித்துள்ளது.
-
இந்தியப் பொருட்களுக்கு இன்று முதல் 50 சதவீத வரி வரைவு அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா
26 Aug 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ப
-
தமிழ்நாட்டை தொடர்ந்து பஞ்சாபிலும் காலை உணவுத்திட்டம்: முதல்வர் பகவந்த் மான் தகவல்
26 Aug 2025சென்னை, பஞ்சாபில் நாளை (இன்று) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கிறேன்.
-
சிறுகுறு தொழில்களை அழித்துவிட்டு இந்திய பொருட்களை வாங்க சொன்னால் எப்படி? - காங்கிரஸ் விமர்சனம்
26 Aug 2025டெல்லி : சிறுகுறு தொழில்களை அறித்துவிட்டு இந்திய பொருட்களை வாங்க சொன்னால் எப்படி என்று காங்கிரஸ் விமர்சித்தள்ளது.
-
துப்பாக்கி சுடும் போட்டியில் அண்ணாமலை அறிவுரை
26 Aug 2025புதுக்கோட்டை : கீரனூரில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அண்ணாமலை அறிவுரை வழங்கினார்.
-
காலை உணவுத் திட்டம்: தமிழக அரசுக்கு சவுமியா பாராட்டு
26 Aug 2025சென்னை, தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
-
ஜோ ரூட்டை பற்றி மனம் திறந்தார் சச்சின்
26 Aug 2025மும்பை : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நட்சத்திர வீரருமான ஜோ ரூட், விராட் கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய பேப் 4 பேட்ஸ்ம
-
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீடு உள்பட 13 இடங்களில் சோதனை
26 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர்.
-
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்
26 Aug 2025திருப்பத்தூர் : பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.