எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்ர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெய்ல் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் தமிழக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளையும், நில உரிமையாளர்களையும் அழைத்து கருத்து கேட்டனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விவ சாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தனர்.
நேற்று 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்ர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், திருப்ர் கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அமர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்அமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்பட உள்ளது. விவசாயிகளும், நில உரிமையாளர்களும் எந்தவித தயக்கமும் இன்றி சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கூறலாம். உங்களுக்கு எவ்வளவு சென்ட் இடம் உள்ளது. அதில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள். இதனால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுங்கள் என்றார்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:
வேலுச்சாமி (அவினாசி தாலுகா, அய்யன் தோட்டம்): எனக்கு 1 ஏக்கர், 1 சென்ட் இடம் உள்ளது. கடந்த பிப்ரவரி 13-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்தனர். உங்கள் விளை நிலம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம். 67 அடி இடத்தை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் சேதம் அடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர். எனக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது. மாற்றுப் பாதையில் குழாய்களை பதிக்க சொல்லுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார்.
பின்னர் சகஜநிலைக்கு வந்து வேலுச்சாமி கூறும்போது, தொழில் இல்லாத போது எங்களால் வாழமுடியாது. எனவே என்னை வாழ வழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன் என்றார்.
தலைமைச் செயலாளர் : கெய்ல் நிறுவனத்தினர் உங்களுக்கு ஏதாவது அத்தாட்சி தந்தார்களா?
விவசாயிகள் பதில்: எதுவும் தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அல்லது ஆற்றுப்படுகை வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க சொல்லுங்கள். விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் எல்லா விவசாயிகளும் என்னைப் போன்ற முடிவுக்குதான் வருவார்கள்.
விவசாயி வெங்கடசாலம் (பல்லாராயன்பாளையம்): எங்கள் விவசாய நிலத்துக்கு 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தார்கள். எனக்கு தென்னை மரங்கள் உள்ளன. இந்த இடம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள். அந்த குழாய் 2 அடி விட்டம் தான் உள்ளது. இதை பதிக்க 5 அடி அகலத்திற்கு இடம் போதுமானது. ஆனால் 67 அடிக்கு இடம் கேட்கிறார்கள்.
தலைமை செயலாளர்: உங்கள் நிலத்தில் ஓரமாக குழாய் செல்கிறதா? அல்லது நடுவில் செல்ல உள்ளதா?
விவசாயி: நிலத்தின் நடுவில்தான் குழாய் பதிப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் வந்ததால் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. இன்று மதியம் கிருஷ்ணகிரி, மாவட்ட விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கடைசி நாளான நாளை தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.
விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் அரசு சார்பில் வழங்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.