முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 18ந் தேதி கிறிஸ்துமஸ் விழா

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 16 - கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18_ந் தேதி மாலை நடத்தப்படுகிறது.

விழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார். சென்னை _ மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்.

விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்.

முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, இந்தியன் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ், திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ், <.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், பெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன், ஆங்கி லிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார், தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல், சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன், அருட் சகோதரி கில்பர்ட்டா, டாக்டர் பால்ரெங்கநாதன், ஆண்ட்ரூ பி.நடராஜன், டாக்டர் எலிசபெத் வர்கீஸ் ஆகியோர் பேசுகிறார்கள்.

டாக்டர் நீதிநாதன், சவுந்தர்ராஜ், ஆனந்த், பால்சுந்தர்சிங், அருள், மதர் லீமாரோஸ், தயானந்தன், அருள்சந்திரன் உள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்.

அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார்.

விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்