முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் தீ விபத்து வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.23 - கும்பகோணம் பள்ளியில் 2004_ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து நஷ்டஈடு வழங்குவது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சண்முகம் தலைமையில் கமிட்டிஅமைக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று விசாரித்து அப்பீல் மனுவை தள்ளிபடி செய்து தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் தீர்ப்பில், பள்ளி குழந்தைகளுக்கு அதிக நஷிடஈடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்ய கமிட்டி அமைத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்