முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி பலாத்காரம்: ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.22 - பெங்களூரில் 6 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தொடர்பான வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் கடந்த ஜூலை 2-ம் தேதி 6 வயது பள்ளி மாணவியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் ஜூலை 15-ம் தேதி வெளியில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாள்களாக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சுதந்திரப் பூங்காவில் திரண்ட விப்ஜியார் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், போலீஸாரை கண்டித்து கோஷமிட்டனர். பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூர் போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:"பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபா என்பவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்