முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் பலாத்காரம்: தனியார் பள்ளி நிறுவனர் கைது

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.24 - பெங்களூரில் உள்ள மாரத்தள்ளி பகுதியில் இருக்கும் 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6-வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளா கைது செய்யப்பட்டார்.

இந்த தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6-வயது சிறுமி, கடந்த 2-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 15-ம் தேதி போலீஸில் புகார் அளித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கில்,அப்பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்ச்சியாளர் முஸ்தபா என்ற முன்னா கைது செய்யப்பட்டார். கைதாகி இருக்கும் அவர், ஏற்கெனவே இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவிற்கு 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. முஸ்தபாவை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளாவும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ருஸ்தம் கரவெள்ளா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறார் நீதிச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சாட்சியங்களை தப்புவிக்க முயற்சித்ததாக ஐ.பி.சி. 201-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே 'விப்ஜியார்' பள்ளி நிர்வாகம் குற்றவாளியை பாதுகாக்க சதி செய்ததாக வர்த்தூர் போலீஸார், பள்ளியின் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்