முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் களைக்கட்டும் சீசன்: அருவிகளில் தண்ணீர்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி, ஜூலை.25 - குற்றாலத்தில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மிதமான சாரலும், இதமான வெயிலும் மாறி மாறி நிலவுகின்றன. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுக்கிறது.

இதையடுத்து, குற்றாலத்துக்கு சுற்றுலாப் யணிகளின் வருகையும் அதிகரித்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்