எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று 1.90 இலட்சம் மீனவ மகளிருக்கும் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்கப்படும் என்று . மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மீன் வளத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது:
கடல் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று மீன்பிடி தொழிலை சார்ந்தே தங்களது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் சுமார் 1.90 இலட்சம் மீனவ மகளிரை அடையாளம் காணவும், அவர்களின் பிறந்த நாள், குடியிருப்பு நிலை அறியவும், அவர்கள் தொழில் புரியும்போது பாதுகாப்பு வழங்கிடவும் ஏதுவாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15ஆம் ஆண்டில் உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எண்ணூர், கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர் முதுநகர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் சூரை மீன் கையாளுவதற்குரிய வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும், நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும், கடலூர் மாவட்டம் கடலூர் முதுநகரில் உள்ள பழைய மீன்பிடித் துறைமுகத்தை புனரமைக்கவும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.
ஊரக பகுதியில் வாழும் மகளிர், வண்ணமீன் வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு அதிக வருவாய் ஈட்டி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய பத்து மாவட்டங்களில் சோதனையடிப்படையில் வண்ணமீன் வளர்ப்பு அலகு ஒன்றிற்கு 50 விழுக்காடு மானியம், அதிகபட்சமாக 50,000/- ரூபாய் வரை வழங்கப்படும். இத்திட்டம், 2014-15ஆம் ஆண்டில் 2 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி செயல்படுத்தப்படும். .
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு, நடப்பாண்டில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகம் மூலம் தீவிர மீன்வளர்ப்பு, மீன் நோய்கள் மற்றும் மண் மற்றும் நீர் தர ஆய்வகங்கள் அமைத்தல், மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் 1.90 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். .
விவசாயிகளிடையே பேராதரவு பெற்றுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள 50 விழுக்காடு இடுபொருள் மானியம் வழங்கும் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி1 கோடியே 13 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். .
2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுhர், திருவாரூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பொருத்தமான நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் இருபது மிதவை கூண்டுகள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் 1 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் வளர்ப்பு செயல்முறை விளக்கம் மேற்கொள்ளப்படும். .
உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி திறனை அதிகரித்திடும் பொருட்டு உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 1,000 உறுப்பினர்களுக்கு தலா இருபது கிலோ அளவிலான நைலான் மீன்பிடி வலை வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியமும், 50 பயனாளிகளுக்கு இழு வலைகள் வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியமும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 78 இலட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.
குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராகும் மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேப்பியா மீன்வளர்ப்பினை அறிமுகப்படுத்துமுகமாக, பண்ணைக் குட்டைகளில் இந்த வகை மீன்வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் செலவினத்தில் 50 விழுக்காடு மானியமாக வழங்கமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி2014-15ஆம் ஆண்டில் 72 இலட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்.
வெளிநாடுகளில் தற்சமயம் மீன்வளர்ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை தமிழ்நாடு மீன்வளத்துறையைச் சார்ந்த தொழில் நுட்ப அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்நாடுகளுக்கு சென்று தேவையான பயிற்சிகள் பெற முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2014-15ஆம் ஆண்டில் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்..
உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் உள்நாட்டு நீர்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கும் அதன் மூலம் அவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு உரிய விலையினைப் பெற்றிடவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் நடப்பாண்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன் இறங்குதளம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் நவீன மீன் விற்பனை அங்காடிகளை பல இடங்களில் நிறுவி மக்களுக்கு தரமான மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது. இச்சேவையினை மேலும் விரிவாக்கிடமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிசென்னை, மதுரை மற்றும் பிற நகரங்களில் 2014-15 ஆம் ஆண்டில், 80 இலட்சம் ரூபாய் செலவில் எட்டு நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். .
தரமான மீன்களை சுகாதாரமான முறையில், நியாயமான விலையில் பொது மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று மீன் விற்பனையை செய்ய ஏதுவாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னையில் மேலும் 5 நடமாடும் மீன்விற்பனை நிலையங்கள் 50 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தால் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இப்பணிகளை மேலும் விரிவுபடுத்தி தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தை சிறந்த முறையில் நிர்வகித்திட, சென்னை சாந்தோமில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்திற்கு கூடுதல் நிர்வாக அலுவலக கட்டிடம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15-ஆம் ஆண்டில் கட்டப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 2014-15ஆம் ஆண்டில் 1 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஒரு புதிய கடல் மீன்குஞ்சு பொறிப்பகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் மூலம் நிறுவப்படும். இதில் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் பயிற்சிகள் மற்றும் செயல்நுட்ப திறனும் அளிக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் தாக்காத தரமான நாட்டு இன இறால் குஞ்சுகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்திட தேவைப்படும் நோய் தாக்காத நாட்டு இன தாய் இறால் வங்கி, முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 1 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2014-15ஆம் ஆண்டில் நிறுவப்படும்.
குறுகிய காலத்தில் வேகமாக வளரக்கூடிய மீனின வகைகளுக்கான மீன் குஞ்சு பொறிப்பகம் அமைத்து, அதன் தொழில்நுட்ப பயிற்சியினை மீன்வளர்போர்க்கு வழங்க 2014-15-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின்கீழ் மண்டல மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் 1 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிஅமைக்கப்படும்.
சென்னை இராயபுரத்தில் இயங்கி வரும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கி வரும் சார் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் இயங்கி வரும் மீன்பிடி துறைமுக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு 2014-15 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, 67 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.