முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநில தேர்தலில் போட்டியிட மாட்டோம்: கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 29 - மராட்டியம், ஜார்கண்ட், காஷ்மீர், அரியானா ஆகிய 4 மாநிலங்களிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது டெல்லி மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலை சந்திக்க ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். 4 மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

அரியானா, மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மிக்கு ஓரளவு தொண்டர்கள் உள்ளனர். எனவே அந்த இரு மாநில நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். மற்ற மாநிலங்களில் போட்டியிட்டால் டெல்லியில் முழு மூச்சாக பிரச்சாரம் செய்ய இயலாது என்று கூறப்பட்டது. இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் அரியானா மாநில ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்