முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசாரம் உதவியாளர் மர்ம சாவு: கொலையுண்டதாக புகார்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜூலை.30 - மத்திய பிரதேசத்தில் சாமியார் ஆசாராம் உதியாளர் ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்தார். யோகா குரு பாபாராம் தேவ் போல் வட மாநிலங்களில் புகழ்பெற்ற சாமியார் ஆசாராம் பாபு, யோகா, ஆன்மீக பாடங்கள் நடித்துவதற்காக ஆசிரமங்களை உருவாக்கினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த உ.பி சிறுமி கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது மகன் மற்றும் பெண் சீடரும் கைதானார்கள். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஷகிந்வாரா ஆசிரமத்தில் தங்கி நிர்வாகத்தைக் கவனித்து வந்த ஆசாராம் பாபுவின் உதவியாளர் பதிராம் திகாரியா (35) என்பவர் திடீர் என்று இறந்தார்.

இவர் பாம்பு கடித்து இறந்ததாக ஆசிரமத்தினர் தெரிவித்தனர். ஆனால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி லவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்