முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் காங்.,கை மீட்க முடியும்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 21 – தலைவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் காங்கிரசை மீட்க முடியும் என்றுதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 71–வது பிறந்தநாள் நேற்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

ராஜீவ்காந்தியின் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு நல்லிணக்க உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, செல்லகுமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி எத்தனையோ நன்மைகள் செய்தார். ஆனால் அவரை விடுதலைப்புலிகள் கொலை செய்துவிட்டனர். தமிழ்நாட்டில் இது நடந்தது. இதனால் தமிழகத்துக்கு களங்கம் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். தொணடர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது பிரதான எதிர்க்கட்சி இல்லாமல் இருப்பது சரியல்ல.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்