முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.10–க்குள் நிர்வாகிகள் நியமனம்: தமிழிசை சவுந்தரராஜன்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 24–தமிழக பா.ஜனதாவுக்கு புதிய மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10–ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார்கள்என்று தமிழிசை சவுந்தரராஜன்தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பா.ஜனதா அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு முழு அரசியல் அதிகாரம் கிடைக்க எந்தெந்த வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வரவேற்போம்.

அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை செயலர், வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்துடன் கூடிய மறுவாழ்வு திட்டங்கள் மீட்டெடுக்கப்படும் என்று நமது வெளியுறவுத்துறை செயலர் கூறி இருக்கிறார்.இதை தான் சுஷ்மாசுவராஜீம் கூறினார்.

தற்போது இலங்கை எம்.பி.க்கள் மோடியை சந்தித்தன் மூலம் தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் நாள் கனிந்து வருகிறது. விரைவில் தமிழர்கள் சுயகவுரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக பா.ஜனதாவுக்கு புதிய மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10–ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார்கள்.புதிய நிர்வாகிகளுடன் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி மாநில தலைவருக்கு முறைப்படி அங்கீகாரம் அளிக்கும்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்தித்தோம். அந்த கூட்டணி அப்படியே நீடிக்கிறது. மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் தான் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்