எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.24 - அரபிக்கடலில் புயல் சின்னம் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம்அடைந்துள்ளது இதையொட்டி தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. ஆனால் பருவமழை அந்த மாதம் சரியாக பெய்யவில்லை. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின் ஜூலை மாதம் முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது ஆகஸ்ட் மத்தி வரை நீடித்தது. கடந்த ஒரு வார காலமாக மழை எதுவும் பெய்யவில்லை. அதனால் தமிழ்நாட்டில் ஈரகாற்றுப்பதம் இல்லை. காற்றாலை மின்சார உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றலுத்த தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளது என்று வானிலை மைய இயக்குனர் ரமணன் அறிவித்திருந்தார். இது நேற்று புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இதனால் மிகப்பெரிய சுற்றளவில் மிகத்திரள்கள் தோன்றி உள்ளன. இதன்காரணமாக கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கேரள அரசும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விட்டுள்ளது.
கேரளாவில் புயல் சின்னம் உருவாகியுள்ளதையொட்டி, அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கர்நாடகத்திலும், தமிழகத்தின் மேற்கு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கர்நாடகத்தில் கனமழை பெய்யும் சூழல் உள்ளதால், காவரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒருரி நாட்களாக கர்நாடகாவில் மழை இல்லாததால் காவிரி நீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் காவிரியில் மீண்டும் நீர்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதகரிக்கும் சூழல் உள்ளது.
மழை நிலைவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழ்நாட்டிலும், குறிப்பாக மேற்கு மாவட்டங்களிலும் மிகவும் பலத்த மழை பெய்யும். அதே நேரத்தில் வங்கக்கடலில் வடதமிழக கரையோரம் மேகக்கூட்டம் உள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்றார்.
அரபிக்கடலில் தென் கிழக்கு பகுதியில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.மொத்தத்தில் தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
பேச்சிப்பாறை 6 செ.மீ., வால்பாறை, குளச்சல் தலா 5 செ.மீ., முதுகுளத்தூர், ஓமலூர் தலா 4 செ.மீ., இரணியல், தாளவாடி தலா 2 செ.மீ., கொடைக்கானல், பெரியார், குழித்துறை, ஏற்காடு, நடுவட்டம், பெண்ணாகரம், சேர்ந்தமங்கலம் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதற்கிடையில்மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 25 அடி உயர்ந்தது. சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 75 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 48 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 30 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 19.8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 17 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 6 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 31 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 3 மி.மீ மழையும், வடக்கு பச்சையாறு அணையில் 29.2 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 30 மி.மீ மழையும் பெய்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 481 கனஅடி வந்து கொண்டிருந்த பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், சேர்வலாறு அணையின் நீர்வரத்து 8,000 கனடியாகவும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு