முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 26 - சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய இயக்குனர் சுரேஷ் நேற்று காலை 10.15 மணியில் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டும் தொனியில் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளான்.

இதையடுத்து விமான நிலைய காவல்துறைக்கு இயக்குனர் தகவல் தெரிவித்து, அண்ணா முனையம் மற்றும் காமராஜர் முனையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டன. பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. சந்தேகப்படும்படியான எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே இந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. அதன்பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்