முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடரியால் சிறுத்தைப்புலியை கொன்ற 56 வயது பெண்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

டேராடூன்,ஆக.28
உத்தராகண்ட் மாநிலத்தில் 56 வயது பெண் ஒருவர் தன்னைத் தாக்கவந்த சிறுத்தைப் புலியை கோடரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

ருத்ரபிரயாக் மாவட்டம், கோட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கமலாதேவி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வயலில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் வனப்பகுதியில் இருந்து தப்பிவந்த சிறுத்தைப்புலி ஒன்று அவரை தாக்க வந்துள்ளது.

இதைக் கண்டு அஞ்சி ஓடாமல் தனது கையில் இருந்த கோடரி மற்றும் அரிவாளைக் கொண்டு அதை எதிர்த்துப் போராடி, இறுதியில் வெட்டிக்கொன்றார். இதில் படுகாயமடைந்த கமலா தேவி தற்போது ஸ்ரீநகர், கார்வால் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கமலா தேவி கூறும்போது, "முதலில் நான் பயந்தேன். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அதனுடன் சண்டையிட்டேன். இன்று எனக்கு இறுதிநாள் அல்ல என்று எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டு அதனுடன் போராடினேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்