முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: தேவகவுடா

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சிக்மகளூர், செப் 20:

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் நிருகட்டா கிராமத்தில் ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டு மக்களிடம் குறை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த பகுதியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதை மாநில அரசு விரைவில் சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் நான் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன். மக்கள் நலன் கருதி சேவை செய்யும் ஆசையில் செயல்பட்டு வருகிறேன். எனக்கு வயதாகி வருகிறது. பதவி ஆசையும் குறைந்து விட்டது. இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன். கட்சியை வளர்ப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருக்கும். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்