முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி., ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி, செப் 22 - ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவி்ல்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பும், அபிஷேகமும் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பகல் ஒரு மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகாசி, விருதுநகர், சங்கரன்கோவில் உட்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. முரளீதரன் தலைமையில் 300க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். 5 சனிக்கிழமைகள் நடைபெறும் இந்த உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே. ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்