முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: ஸ்குவாஷ் வீரர் சவுரவ் இறுதிக்கு தகுதி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.23 - ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் வென்று இந்திய வீரர் சவுரவ் கோஷல் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தென் கொரியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது நாளான நேற்று இந்தியா தனது 6வது பதக்கத்தைப் பெற்றுள்ளது.

17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவும் கலந்து கொண்டு பதக்க வேட்டையில் தீவிரமாக உள்ளது.

அதன்படி, இன்று ஸ்குவாஷ் போட்டி மூலமாக இந்தியா 6வது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒற்றையர் மகளிர் ஸ்குவாஷ் அரையிறுதிபோட்டியில் தீபிகா பல்லிகல் தோல்வியடைந்தார். இதனால் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றஇ பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்