முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் யெகோவாவின் 3 நாள் மண்டல மாநாடு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, அக் 1:

யெகோவாவின் 2014ம் ஆண்டுக்கான மண்டல மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரும் 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

கடவுளுடைய அரசாங்கத்தை முதலில் நாடுங்கள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு மத நம்பிக்கையுடைய மக்களும், கடவுளுடைய அரசாங்கத்திற்காக ஜெபிக்கிறார்கள். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக மாநாட்டு பிரதிநிதி மை பீட்டர் ஜான் போஸ்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 94434 60423, 87603 68198 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்