முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய வழக்குகளில் ஆஜரான ராம் ஜெத்மலானி

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக்.01 - புகழ்பெற்ற வழக்கறிஞராகக் கருதப்படும் ராம் ஜெத்மலானி, பாஜக தலைமையிலான முந்தைய அரசில் சட்ட அமைச் சராக இருந்துள்ளார். அதேபோல பார் கவுன்சிலின் தலைவர் பதவி உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவராகவும் இருந்து வருகிறார். சர்ச்சைக்குரிய வழக்கு களிலும், பிரபலங்களின் வழக்கு களிலும் தொடர்ந்து ஆஜராகி வரும் ராம் ஜெத்மலானி, தனது அபார வாதத் திறமையினால் எதிர்வாதிகளை வீழ்த்தும் வல்லமை பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்ட னையை நிறுத்துவதற்குக் கார ணமாக இருந்தார்.

அப்சல் குரு தூக்கு தண்டனை ரத்து, மும்பையை கலக்கிய நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் வழக்கு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கு ஆகியற்றில் ஆஜராகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதேபோல போலி என்கவுன்ட்டர் வழக்கில் இப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கும், சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூராப்பவுக்கும், ஜாமீன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

எனவே ஜெயலலிதாவுக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வாங்கித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்