முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு - வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 22:

அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெரியாறு, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:

பெரியாறு 9.2, தேக்கடி 22.2, கூடலூர் 21.6, கொடைக்கானல் 57.8, பேரணை 9, குப்பனாம்பட்டி 5.2, ஆண்டிபட்டி 2, மதுரை 2.4, கள்ளந்திரி 4, தனியாமங்கலம் 6, புலிப்பட்டி 6.4, இடையபட்டி 3, விரகனூர் 4.4, சண்முகாநதி 22, பாளையம் 8, வீரபாண்டி 8, மஞ்சளாறு 6, மருதாநதி 20, சேர்வலாறு 8.

பெரியாறு அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 1,660 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து திங்கள் கிழமை வினாடிக்கு 2,657 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணைக்கும் வினாடிக்கு 1,779 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து 1,981 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைகளிலும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 3,964 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையை விட 100 மில்லியன் கனஅடி தண்ணீர் கூடுதலாக தேங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக இருந்தது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,660 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 1,311 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் 44.09 அடியாக இருந்தது. இரண்டு அணைகளிலும் சுமார் அரையடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருந்தது. அதே சமயம் முந்தைய நாட்களைவிட கூடுதல் தண்ணீர் வரத்து இருப்பதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்