முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்: சரத்குமார் அறிக்கை

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 30: கருப்பு பணம் சேர்வதற்கு காரணமான ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார் .

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்ற தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்போரின் பட்டியலை மத்திய அரசிடம் அளித்ததாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் மத்திய அரசு அவற்றை வெளியிட மறுக்க, அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் தற்சமயம் 3 பேரின் பெயர்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பலரது பெயர்கள் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அனைவரின் பட்டியலையும் அரசு வெளியிட வேண்டும்.சுதந்திரம் அடைந்து 68–ம் ஆண்டில் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நம்நாடு, இன்னும் கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு துறைகளிலும் பின்தங்கியுள்ளது. நாம் அடைய வேண்டிய இலக்கு இன்னும் வெகு தூரத்தில் உள்ளது. எனவே, மத்திய அரசு, கருப்பு பண விவகாரத்தில் மெத்தனம் காட்டுவது கண்டனத்திற்குரியது.பட்டியலை வெளியிடுவது என்பது மட்டுமல்லாமல், கருப்பு பணத்தை உடனடியாக நம் நாட்டிற்கு திருப்பிக்கொண்டுவர தீவிரமான, ஊழலும் ஒரு முக்கிய காரணம் என்ற வகையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்