எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி - ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப் பகுதியான மார்டின் பிளேஷில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் சாக்லேட் கபே என்ற பிரபல சிற்றுண்டி நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு பலர் அமர்ந்து குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு திடீ ரென சில மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் யாரும் எதிராபாராத நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிற்றுண்டி நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சிற்றுண்டி நிலையத்தின் வாசல் கதவுகளை மூடிய அவர்கள் அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறை பிடித்தனர். இது பற்றிய தகவலறிந்ததும் துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அவர்கள் சிற்றுண்டி நிலையத்தை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டனர். அப்பகுதி வர்த்தக நிலையங்கள் நிறைந்த பகுதி. இதனால் அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. போக்குவரத்தும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே சிற்றுண்டி நிலையத்துக்குள் 2 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்பு நிற கொடியை பிடித்தபடி நின்றுள்ளனர். அதில் அரபு மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் சிற்றுண்டி நிலையத்துக்குள் 50 பேரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர்கள் 3 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் எதற்காக துப்பாக்கி முனையில் பிணை கைதிகளை பிடித்து வைத்துள்ளனர் என தெரியவில்லை. அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருந்தாலும் பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அமைதியான நாடு. இங்கு அந்த நிலை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிணை கைதிகளில் 5 பேர் அங்கிருந்து தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிணைக் கைதிகளில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவன் மட்டுமே இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அங்கிருந்து 70 பேர் சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்களில் 20 பேர் மீ ண்டும் நாடு திரும்பி விட்டதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் காரணமாக சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மூடப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தகவலை சிட்னியில் இந்திய தூதரக அதிகாரி சஞ்சய்நிர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக தூதரகம் மூடப்பட்டதாகவும் அதிகாரிகள் தங்களது இடங்களுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ள சிற்றுண்டி நிலையத்தில் இருந்து இந்திய தூதரகம் 400 மீட்டர் தொலைவில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் இந்தியர்கள் உள்ளனரா என கேட்ட கேள்விக்கு இது குறித்து பதில் அளிக்க முடியாது என மறுத்து விட்டார். இதற்கிடையில் சிட்னியில் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்புடன் பத்திரமாக இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறினார். வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் இது குறித்து இந்திய தூதரை தொடர்பு கொண்டதாகவும் கூறினார். ஆஸ்திரேலியாவில் பிணை கைதிகள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
சிட்னியில் நடந்துள்ள இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது போன்ற மனிதாபிமானமற்ற இச்சம்பவம் துரதிஷ்டவசமானது என்றார்.
போலீசார் அதிரடியாக சண்டையிட்டு பிணைகைதிகளை மீட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.