முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர் கொலை வழக்கு: கடற்படை வீரர்கள் இத்தாலி செல்ல அனுமதி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அரபிக்கடலில் மீன் பிடித்த இந்திய மீனவரை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். இதையடுத்து இத்தாலி கடற்படை வீரர்கள் சல்வதோரே கிரானே, மச்சி மில்லியானோ லட்டோரே ஆகிய 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள். அவர்கள் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே 2 பேரில் ஒருவர் இருதய அறுவை சிகிச்சைக்கும், மற்றொருவர் கிறிஸ்துமஸ் கொண்டாடவும் இத்தாலி செல்ல 2 மாதம் பரோல் கேட்டு சுப்ரீ்ம் கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அவர்களுக்கு இத்தாலி செல்ல அனுமதி வழங்க மறுத்தது. கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சலுகை வழங்க முடியாது. அது உலகில் எங்கும் நடைபெறாதது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து