முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து புதுவையில் இன்று பந்த்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி - ஆசிரம சகோதரிகள் 3 பேர் தற்கொலை செய்ததை அடுத்து நேற்று முன்தினம் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை அவர்கள் இது சம்பந்தமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து இன்று சனிக்கிழமை முழு அடைப்பு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

பல அத்துமீறல்கள் நடைபெற்று வரும் ஆசிரமத்தை மூடி சீல் வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆசிரமத்தில் நடக்கும் தவறுகளை கட்டுப்படுத்தாமல் காப்பாற்றுவதற்கு முயற்சிக்க கூடாது. புதுவை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கொண்டு ஆசிரம

நிர்வாகத்தை நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முழு அடைப்புக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மற்ற கட்சிகளும் ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு அடைப்பு காரணமாக இன்று புதுவையில் பஸ், ஆட்டோ ஓடாது. கடைகள் அடைக்கப்படும். பள்ளிகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து