எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அவரது மனைவி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் சர்வமத கோவில்களில் விசேஷ பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து பங்கேற்ற அக்னிச்சட்டி ஊர்வலம் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,துணை மேயர் கு.திரவியம், ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,எம்.வி.கருப்பையா,சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்னிசட்டி ஊர்வலத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,அவரது மனைவி ஜெயந்தி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டியை கையில் ஏந்தி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, கழக நிரந்தரப்பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான அம்மா மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்ந்திட வேண்டி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தினமும் இஷ்ட தெய்வங்களை மனமுருக வழிபட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் முதல்வர் அம்மா மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். இதற்காக 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளனர். நமது பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, தமிழக மக்களின் முதல்வர் அம்மா பொய்வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்ற தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கோவில்களுக்கு செல்லும் ஒவ்வொரு மக்களும் தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். அவர்களுக்கு எது தேவையோ அதனை முன்வைத்து பிரார்த்திப்பார்கள். ஆனால் இங்கே முதலமைச்சராக அம்மா மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அனைவரும் இறை வேண்டுதல் செய்கிறோம். மக்களின் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அம்மா மீண்டும் வருவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத்தலைவர்கள் கே.ராஜபாண்டியன்,கே.ஜெயவேல், நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், எஸ்.முனியாண்டி, முத்துக்கருப்பன்,ஷ.ராஜலிங்கம், ஏ.சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன் , தொகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன்,கிரம்மர் சுரேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன்,சுப்பு ,பகுதி செயலாளர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, அண்ணாநகர் எம்.என்.முருகன், செ.பூமிபாலகன், ஏ.கே.முத்துஇருளாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம்,முனியசாமி, அணி செயலாளர்கள் தமிழ்செல்வன்,விஜயகுமார்,ரமணி,ராஜூவ்காந்தி, வினோத்குமார், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல்,கலைசெல்வன்,புதூர் அபுதாகீர்,மற்றும் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன்,வடக்கு 1 ம் பகுதி பேரவை இணைச்செயலாளர் மகாதேவன்,வடக்கு 1 ம் பகுதி துணைச்செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, கவுன்சிலர்கள் எம்.கேசவபாண்டியம்மாள்,குமுதா.ஜெயலெட்சுமி,இரா.லெட்சுமி, பி.குமார்,விஜயராகவன், மாரி ஆழ்வார் ராமன்,முத்துராஜா,நூர்முகமது,தமிழ்செல்விக்கோட்டைச்சாமி, அனுராதா தினேஷ்,கலாவதி தேவதாஸ்,முருகேஸ்வரி துரைப்பாண்டி,வட்ட செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஏ.காஜா,புதூர் கண்ணன்,கார்த்திக் முனியசாமி, மணிகண்டன், நிர்வாகிகள் ஜி.அன்புசெழியன், காட்டுராஜன், எம்.ஜி.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.