எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அவரது மனைவி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் சர்வமத கோவில்களில் விசேஷ பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஏற்பாட்டில் 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து பங்கேற்ற அக்னிச்சட்டி ஊர்வலம் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,துணை மேயர் கு.திரவியம், ஆர்.கோபாலகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் ஏ.கே.போஸ்,எம்.வி.கருப்பையா,சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்னிசட்டி ஊர்வலத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,அவரது மனைவி ஜெயந்தி உள்பட 2 ஆயிரம் பெண்கள் அக்னிசட்டியை கையில் ஏந்தி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊர்வலம் கோவிலுக்கு சென்றடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, கழக நிரந்தரப்பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான அம்மா மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்ந்திட வேண்டி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தினமும் இஷ்ட தெய்வங்களை மனமுருக வழிபட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அரசியல் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் முதல்வர் அம்மா மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார். இதற்காக 2 ஆயிரம் பெண்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளனர். நமது பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, தமிழக மக்களின் முதல்வர் அம்மா பொய்வழக்கில் இருந்து விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்ற தமிழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கோவில்களுக்கு செல்லும் ஒவ்வொரு மக்களும் தங்களது வேண்டுதல்களை வைப்பார்கள். அவர்களுக்கு எது தேவையோ அதனை முன்வைத்து பிரார்த்திப்பார்கள். ஆனால் இங்கே முதலமைச்சராக அம்மா மீண்டும் வரவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அனைவரும் இறை வேண்டுதல் செய்கிறோம். மக்களின் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அம்மா மீண்டும் வருவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத்தலைவர்கள் கே.ராஜபாண்டியன்,கே.ஜெயவேல், நிலைக்குழு தலைவர்கள் எஸ்.டி.ஜெயபாலன், எஸ்.முனியாண்டி, முத்துக்கருப்பன்,ஷ.ராஜலிங்கம், ஏ.சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன் , தொகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன்,கிரம்மர் சுரேஷ், ஏ.பி.பாலசுப்பிரமணி, ரவிச்சந்திரன்,சுப்பு ,பகுதி செயலாளர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, அண்ணாநகர் எம்.என்.முருகன், செ.பூமிபாலகன், ஏ.கே.முத்துஇருளாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம்,முனியசாமி, அணி செயலாளர்கள் தமிழ்செல்வன்,விஜயகுமார்,ரமணி,ராஜூவ்காந்தி, வினோத்குமார், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல்,கலைசெல்வன்,புதூர் அபுதாகீர்,மற்றும் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன்,வடக்கு 1 ம் பகுதி பேரவை இணைச்செயலாளர் மகாதேவன்,வடக்கு 1 ம் பகுதி துணைச்செயலாளர் ரகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வி.கே.சாமி, கவுன்சிலர்கள் எம்.கேசவபாண்டியம்மாள்,குமுதா.ஜெயலெட்சுமி,இரா.லெட்சுமி, பி.குமார்,விஜயராகவன், மாரி ஆழ்வார் ராமன்,முத்துராஜா,நூர்முகமது,தமிழ்செல்விக்கோட்டைச்சாமி, அனுராதா தினேஷ்,கலாவதி தேவதாஸ்,முருகேஸ்வரி துரைப்பாண்டி,வட்ட செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஏ.காஜா,புதூர் கண்ணன்,கார்த்திக் முனியசாமி, மணிகண்டன், நிர்வாகிகள் ஜி.அன்புசெழியன், காட்டுராஜன், எம்.ஜி.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


