முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயருகிறது

புதன்கிழமை, 28 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

லண்டன் - கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் என ஓபேக் நாடுகள் அறிவித்துள்ளன. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது.  கடந்த ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக கூறப்பட்டது. தற்போது பேரல் ஒன்றுக்கு 45 டாலர் முதல் 55 டாலர் வரை கச்சா எண்ணெய் விற்பனையாகி வருகிறது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் வாய்ப்புள்ளதாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபேக் தெரிவித்துள்ளது. இது குறித்து ஓபேக் கூட்டமைப்பின் தலைவர் அப்துல்லா அஸ்பத்ரி கூறுகையில், கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை மீண்டும் 200 டாலர் வரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து