முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய்க் கிரகத்துக்கு பயணம்: 3 இந்தியர்கள் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - செவ்வாய்க் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக நடைபெற்று வரும் தேர்வில், நான்காம் சுற்றுக்கு 100 பேர் தகுதியடைந்துளஅளனர். அதில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2024-ம் ஆண்டில் நான்கு பேரை விண்கலம் மூலம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பித் திட்டமிடப்பட்டுளஅளது. தேர்வாகும் நபர்களுக்கு சுமார் 7 ஆண்டுகல் பயிற்சி கொடுக்கப்பட்டு செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ளனர். இந்தப் பயணத்துக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். மூன்றாவது சுற்றின் முடிவில் தகுதியான 50 ஆண்கள், 50 பெண்கள் என மொத்தம் 100 பேரை அடுத்த சுற்றுக்கு மார்ஸ் ஒன் தேர்வுக் குழுவினர் தற்போது தேர்ந்தெடுத்துள்ளனர்.

அவர்களில் அமெரிக்காவிலிருந்து 39 பேரும், ஐரோப்பாவில் 31 பேரும், தேர்வாகியுளஅளனர். ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில்  முனைவர் பட்டம் படித்து வரும் தரண் ஜீத் சிங், கேரளத்தைச் சேர்ந்த ஷிரதா பிரசார், துபாயில் வசிக்கும் ரித்திகா சிங் உள்ளிட்ட மூன்று இந்தியர்களும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து