முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்மொழித் தன்மை தான் இந்தியாவின் சொத்து

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்தியாவில் புழக்கத்தில் இருந்துவரும் பன்மொழித் தன்மை தான் நாட்டின் சொத்து என மத்திய மனிதவளத்துறை  அமைச்சர்  ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நேற்று    நடைபெற்ற தாய்மொழி தினம் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. நாம் பெருமைப்படுவதற்குரிய ஒரு காரணமாகவும் இதை கருத வேண்டும். உதாரணமாக தனது தாய் மொழியான தமிழை மட்டுமே இனிமையான மொழி என்று போற்றிப் புகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 30-க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.

பன்மொழித் தன்மை என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இது நமது நாட்டின் சொத்து. நாம் பெற்றடைந்த பாரம்பரியத்தை இது பறைசாற்றுகின்றது. மேலும், நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும் வளமாகவும் இந்த பன்மொழித் தன்மை திகழ்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து