எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் பிரமோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை காணொலி காட்சி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக இருந்தவர்களையும், நமது நாட்டைத் தாக்கி பல ஆயிரம் குடும்பங்களை அழித்த பயங்கரவாதிகளையும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் நீதியின் முன் நிறுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் இன்று நமது ராணுவத்தின் துணிச்சலை போற்றுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமில்லை. அது, இந்தியாவின் அரசியல், சமூகம் மற்றும் ராணுவ மன உறுதியின் சின்னம். இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியையும், ராணுவ வலிமையையும் எடுத்துரைத்திருக்கிறது. பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி உரிய பதிலடியை கொடுத்தன.
இந்தியாவுக்குள் பயங்கரவாத தாக்குல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை உலகமே பார்த்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றி, இது புதிய இந்தியா என்றும், எல்லைக்குள் மற்றும் எல்லைக்கு அப்பால் என பயங்கரவாத்துக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


