முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வேன் தீ பிடித்ததில் 10 பேர் உடல் கருகி பலி

செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

கராச்சி - பாகிஸ்தானில் கராச்சி அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் சென்றனர். நூரிஅலாத் நகருக்கு அருகே சென்ற போது அந்த வேன் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் அதன் பெட்ரோல் டேங் உடைந்து தீ பிடித்தது.

தகவல் அறிந்ததும் தீ அனைப்பு குழுவினர் விரைந்து சென்றனர். அதற்குள் தீயில் கருகி 10 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 7 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்து அடையாளம் காணமுடியாத அளவிற்கு கரிக்கட்டையானது.

விபத்துக்குள்ளான வேனில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றி இருந்தனர். ரோடு மோசமாக இருந்ததால் டயர் வெடித்து கவிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ரோடுகள் படுமோசமாக இருப்பதாகவும், வாகனங்கள் சரிவரப் பராமரிக்கப்படாததால் விபத்துகள் அதிக அளவில் நடப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து