முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூத்த குடிமக்கள் நலனுக்கு ரூ.9000 கோடி நிதி

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - உரிமை கோரப்படாத தொழிலாளர் சேம நலநிதியில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும் என்ற நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

தொழிலாளர் சேமநல நிதி ரூ.25 ஆயிரம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த நிதியை உரியவர்களுக்கு திருப்பி அளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உரிமைக்கோரப்படாத நிதியில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடியை மூத்த குடிமக்கள் நலநிதிக்கு மாற்றப்படும். தொழிலாளர் சேம நல நிதி திட்டம் சீரமைக்கப்படும். இதன் மூலம் தொழிலாளர்கள் எளிதாக இந்த திட்டத்தால் பயன்பெற முடியும். மேலும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து