முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் குற்றசாட்டு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியில் தற்போது உட்கட்சிபூசல் வெடித்துள்ளது.  டெல்லி சட்டமன்ற தேர்தலில் நன்கொடை பெற்ற விசயத்திலும் வேட்பாளர் தேர்விலும் பூஷணின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டன.  இதைதொடர்ந்து கெஜ்ரிவாலுக்கும் பூஷண், யோகேந்திரயாதவ் ஆகியோரிடையே கருத்து மோதல் வெடித்தது. பின்னர் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் நீக்கப்பட்டனர்.

இதுகுறித்து பிரசாந்த் பூஷண் பேட்டியளிக்கையில், கெஜ்ரிவால் சிறந்த நிர்வாகியாக இருக்கலாம். அவர் அருகில் இருக்கும் சிலர் ஒத்துஊதுகிறார்கள். ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று நாங்கள் கோரியுள்ளோம். கெஜ்ரிவாலிடம் கட்சியின் உண்மையான விவரங்களை கூறமுடியாமல் சிலர் இடைவெளியை உருவாக்கிவிட்டனர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து