முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்கள் பணியின் போது மது அருந்தினால் சஸ்பெண்ட்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - பணியிடத்தில் புகை, மது பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முறை உடனடியாக அமலுக்கு வருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.  இது கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான பணியில் இருப்பவர்கள், ஏனைய அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்த விதிமுறை, ஏற்கெனவே அமலில் இருந்தாலும் அரசு ஊழியர்கள் பலர் இதனை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து இந்த விதிமுறையை மேலும் தீவிரமாக அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.  மேலும், பணி நேரத்தில் ஓட்டுநர்கள் புகை, மது உபயோகித்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து