முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிதீஷ்குமார் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தலைநகர் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொண்டார் நிதீஷ்குமார். இது குறித்து கெஜ்ரிவாலை சந்தித்த பிறகு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,
 
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதற்கு எங்களுடைய முழுமையான ஆதரவையும் நாங்கள் அளிப்போம் என்று நிதீஷ்குமார் தெரிவித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றதற்காக கெஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் நிதீஷ்குமார். டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் பெற்றது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று தெரிவித்த அவர், கெஜ்ரிவாலை சந்தித்த போது வேறு எதையும் விவாதிக்கவில்லை.

அவரை வாழ்த்துவதற்காகவே வந்தேன் என்றும் நிதீஷ்குமார் தெரிவித்தார். முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடியையும் நிதீஷ்குமார் சந்தித்தார். அப்போது பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பீகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தனது கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார் பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து