முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் விவகாரம்: பிரதமரின் பாராட்டுக்கு வி.கே. சிங் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப் 20:

ஏமன் நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் வி.கே. சிங்கை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசியிருந்தார். டெல்லியில் நேற்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வி.கே. சிங்கை அவர் புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு மத்திய வெளியுறவு விவகார துறை இணை அமைச்சர் வி.கே. சிங், பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக நான் எடுத்து கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டியுள்ளார். அதற்காக நன்றி. இருந்தாலும் அவருடைய வழிகாட்டுதல் மற்றும் சீரிய தலைமையால்தான் என்னால் அது சாத்தியமாயிற்று என்றும் வி.கே. சிங் கூறியுள்ளார். எனக்குகொடுக்கப்பட்ட பணியை நான் நிறைவேற்றியுள்ளேன். அதில் எனக்கு திருப்தி என்றும் வி.கே. சிங் அடக்கத்தோடு கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து