எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால், பொன்னும் பொருளும் சேரும் என்பதாக ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் பொன் நகைகளை வாங்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று புன்னகையுடன் நகைக்கடைக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் 20 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் வியாபாரம் ஆகும் என அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல் இந்த வருடத்தில் நகை வாங்க முன்கூட்டியே பதிவு செய்வதில் வாடிக்கையாளர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலான நகைக்கடைகளில் கடந்த வருடத்தை விட, 40 சதவீத அளவுக்கு நகை வாங்க முன்கூட்டியே பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நகைக்கடைக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுவதால் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தயங்குவதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அட்சய திருதியை நாளில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவரான ஜெயந்திலால் சல்லானி தெரிவித்தார். கடந்த வருடம் அட்சய திருதியை நாளில் 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2800 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது கிராம் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வருடம் வாடிக்கையாளர்கள் எத்தனை கிராம் தங்கம் வாங்குகிறார்களோ, அவற்றுக்கு இணையாக வெள்ளி இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என பல நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன.
கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்து நகை திருடுபவர்களை தடுக்க விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. என்.எஸ்.சி. போஸ் சாலையில் மட்டும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 50 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போலீசும் தி.நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் தற்காலிமாக சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியுள்ளது.
தங்கம் வாங்க மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நகைக்காரர்கள் அதில் கலப்படம் செய்யாமல் இருக்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு தங்கத்தில் கலப்படம் செய்பவர்களுக்கு ஏதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்தில் எளிதில் கண்டறிய முடியாத ஓஸ்மியம், பல்லடியம், இரிடியம் மற்றும் ருத்தெனியம் ஆகியவை கலந்து விற்பதாக நுகர்வோர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தங்கத்துடன் இரிடியம் சேர்க்கப்பட்ட நகையை அணியும் போது அதில் உள்ள அணுசக்தி மனித உடலின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் என நுகர்வோர் சங்கத்தின் நிர்வாக அறங்காவலரான நிர்மலா தேசிகன் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எடையும், தரத்தையும் உறுதிப்படுத்தாத நகைக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கலப்படம் செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கவேண்டும் என அரசை நுகர்வோர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தங்கத்தின் தரத்தை தெரிந்து கொள்ள எக்ஸ்-ரே பிளோரசன்ஸ் சோதனை செய்யலாம் என்றும் நுகர்வோர் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சென்னை உள்பட பல மாநகரங்களில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள் தங்க நகைக்கான சேதாரத்தை பெருமளவு குறைத்துள்ளன. அதே சமயத்தில் தமிழகத்தின் பல வெளி மாவட்ட நகைக்கடைகளில் இவ்வாறு சேதாரம் குறைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை. இந்த அட்சய திருதியை நாளிலாவது ஏமாற்றப்படாத வகையில் தமிழகம் முழுவதும் சீரான சேதாரம் மற்றும் கூலி வசூலிக்கவேண்டும் என்று அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும் தீபாவளி பண்டுக்காக வழங்கப்படும் தங்கக்காசு மற்றும் தங்க நகை போல தங்கத்தின் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்றும் வாடிக்கையாளர்கள் கவலைப்படுகின்றனர்.
குறிப்பாக வெள்ளிக்கு கூலி மற்றும் சேதாரம் விதிப்பதை அறவே தவிர்க்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.