முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் விபத்து: சல்மான் கான் வழக்கில் மே 6-ம் தேதி தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார்.

ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்கு நிறைய அவகாசம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இரு தரப்பு வாதங்களும் நிறைவுற்றது. தீர்ப்பு வழங்கப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று நீதிமன்றம் கூடியதும், சல்மான் கான் வழக்கில் வரும் மே. 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து