முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தக்க நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: நேபாளத்திற்கு சென்ற தமிழர்கள் பாதுகாப்பாக தமிழகம் திரும்புவதற்கானஅனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் எவ்வித கவலையும்கொள்ளத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

25.04.2015 அன்று காலை 11.41 மணிக்கு நேபாளத்தில்கடுமையான நிலஅதிர்வு ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்துநூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் குறித்ததகவல் கிடைக்கப் பெற்றவுடன் தமிழ்நாட்டைச் சார்ந்த எவரேனும் இதில்சிக்கியிருந்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழகஅரசு உடனே எடுத்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் / மாநிலதுயர்தணிப்பு ஆணையர், மாநில அவசரகால செயலாக்க மையஅலுவலகத்தை உடனடியாக தயார் நிலையில் இருக்கச் செய்தார்.புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறைதயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும்தயார்நிலையில் வைக்கப்பட்டு நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின்பெயர், நேபாளத்தில் தங்கியுள்ள இடம் மற்றும் அவர்களது தொலைபேசிஎண் ஆகியவற்றை அவர்களின் உறவினர்களிடமிருந்து பெறஅறிவுறுத்தப்பட்டது.

26.04.2015 அன்று பிற்பகல் வரைதமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்ற யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் உறவினர்களிடமிருந்து 15 தொலைபேசி அழைப்புகள்பெறப்பட்டன. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த 311 பயணிகள்மற்றும் யாத்ரிகர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள்பெறப்பட்டுள்ளன. இது குறித்து தேவையான மேல் நடவடிக்கைமேற்கொள்ளுமாறு புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லஅலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ளியுறவுத்துறைஅமைச்சகத்திற்கு இத்தகவல்களை அளிக்கவும் நேபாளத்திலிருந்துதிரும்பிவரும் தமிழர்கள் குறித்த தகவல்கள் பெறவும் தமிழ்நாடு இல்லஅலுவலர் ஒருங்கிணைப்பாளராக வெளியுறவுத்துறை அமைச்சகஅலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டுவருகிறார். புதுதில்லிவிமான நிலையத்தில் நேபாளத்திலிருந்து திரும்பிவரும் தமிழர்களைதமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துவரவும் அவர்கள் தமிழகத்தில் தத்தம்இடங்களுக்கு திரும்பி செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யவும்இரு அலுவலர்கள் புதுதில்லி விமான நிலையத்தில்பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும்தமிழகத்தைச் சார்ந்தவர்களை மீட்க தக்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. அவர்கள் புதுதில்லி வந்தவுடன் தமிழ்நாடுஇல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன்டெல்லியிலிருந்து தமிழ்நாடு வருவதற்கும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக, உறவினர்கள் நேபாளத்தில் தங்கியிருக்கும்பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள தமிழ்நாடு இல்லத்திலஅமைக்கப்பெற்றுள்ள உதவி மையத்தினை 011-21493460 மற்றும்011-24193456 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.சென்னையிலுள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில்கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 மற்றும் மாவட்டங்களில் உள்ளகட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்புகொள்ளலாம்.நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் தமிழகம் திரும்புவதற்கானஅனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.இதுகுறித்துபாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் எவ்வித கவலையும்கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து