முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு 52 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      உலகம்
Image Unavailable

பீருட்: சிரியாவின் வடக்கு மாகாணங்களில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு குறைந்தது 52 பொதுமக்கள் பலியானதாக கண்காணிப்பு குழு தெரிவித்தது. இது குறித்து சிரியாவில் இருக்கும் ஐ.நா. போர் கண்காணிப்பு குழு கூறும்போது, "அலீபோ மாகாணத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 7 குழந்தைகள் உட்பட 52 பொதுமக்கள் பலியாகினர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் வயல்களை குறிவைத்து அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதுவரை பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து