முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரக்கு-சேவை வரியால் மாநிலங்கள் வருவாய் பாதிக்காது: ஜெட்லி

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  சரக்குமற்றும் சேவைகள் வரியால் மாநிலங்கள் வருவாய் பாதிக்காது என்று மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது,
மத்திய மாநில அரசுகளுக்கு சீரான வருவாய் கிடைக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

இந்த வரி திட்டம் குறித்து சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலின் தலைவராக அருண் ஜெட்லி இருக்கிறார். இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களில் 3ல் 2பங்கு நபர்கள் மாநிலங்களைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

3ல் ஒரு பங்கினர் மத்திய அரசை சார்ந்தவர்களாக இருப்பார்கள்.  சரக்குமற்றும் சேவைகள் வரி தொடர்பான திருத்த மசோதா கடந்த 2014ம்ஆண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த மசோதா நேற்று மக்களவையில் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து